தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு: பெண்கள், சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்

புதுடெல்லி: பெண்​கள் மற்​றும் சமூகப் பாது​காப்​பில் அதிக கவனம் செலுத்​தும் வகையி​லான தொழிலா​ளர் வரைவு கொள்கையை மத்​திய அரசு வெளி​யிட்​டுள்​ளது. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் பெண்​களின் பங்​களிப்பை 35 சதவீத​மாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, இளைஞர்​களுக்​கான தொழில்​முனைவு மற்​றும் அதற்​கான வழி​காட்​டு​தல் முயற்​சிகளை விரி​வாக்​கம் செய்​வதை​யும் முக்​கிய நோக்​க​மாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்​துள்​ளது. பல தளங்​களை தேடிச் சென்று பார்​வை​யிடு​வதற்கு பதிலாக, தொழிலா​ளர்​கள் தங்​கள் நன்​மை​களை ஒரே தொகுப்​பின் கீழ் பார்த்து … Read more

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: கேரள ஐகோர்ட் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பான எந்தத் தகவலும் கசியக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைக்கப்பட்ட கவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு … Read more

சோதனையின் போது ரூ.1.45 கோடி ஹவாலா பணத்தை சுருட்டிய 9 ம.பி. காவலர்கள் சஸ்பெண்ட்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை இரவு நடந்த வாகன சோதனை​யின்​போது பந்​தோல் காவல் நிலையை பொறுப்​பாளர் மற்​றும் காவலர்​கள் ஒரு நான்கு சக்கர வாக​னத்தை வழிமறித்​துள்​ளனர். அப்​போது அதில், மத்​தி​யப் பிரதேசத்​தில் உள்ள கட்​னி​யில் இருந்து மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள ஜல்​னா​விற்கு ஒரு பெரிய அளவி​லான தொகை கொண்டு செல்​லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஹவாலா பணம் என சந்​தேகப்​பட்ட போலீ​ஸார் அதனை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, ஓட்​டுநரை அடித்து விரட்டி விட்டு அந்​தப் பணத்தை … Read more

முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் … Read more

சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம்: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு 

திருவனந்தபுரம்: சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக 6 வாரங்​களில் விசா​ரணை அறிக்​கையை சிறப்பு விசா​ரணைக் குழு​வினர் (எஸ்​ஐடி) தாக்​கல் செய்​ய​வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்​பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்லை என புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கடந்த செப்​டம்​பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் … Read more

ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி இந்தியா வருவது இதுவே முதல் முறை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமிர் கான் முட்டாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை … Read more

வயநாடு மறுசீரமைப்புக்காக ரூ.2,221 கோடியை விடுவிக்க மோடியிடம் பினராயி விஜயன் கோரிக்கை

புதுடெல்லி: கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2,221 கோடியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து … Read more

ஆப்கன் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது: அமிர் கான் முட்டாகி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்றும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் செயல்பட தங்கள் அரசு அனுமதிக்காது என்றும் இந்தியா வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார். 2021ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது. அதன் பின்னர் … Read more

‘மனநல ஆரோக்கியமே ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: மனநலம் ஆரோக்கியம்தான் நமது ஒட்டுமொத்த நலவாழ்வின் அடிப்படையானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக மனநல தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மனநல ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையான பகுதியாகும் என்பதை உலக மனநல தினம் நமக்கு நினைவூட்டுகிறது. வேகமான உலகில், இந்த நாள் மற்றவர்களிடம் கருணையை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனநலம் பற்றிய உரையாடல்கள் மிகவும் … Read more

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய எஸ்.ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. … Read more