தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு: பெண்கள், சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்
புதுடெல்லி: பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்கம் செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்துள்ளது. பல தளங்களை தேடிச் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, தொழிலாளர்கள் தங்கள் நன்மைகளை ஒரே தொகுப்பின் கீழ் பார்த்து … Read more