மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் – வன்முறையால் பதற்றம்

லே: யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB), கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காக காங். 10 வாக்குறுதிகள் – பிஹாரில் ராகுல் காந்தி வெளியீடு

பாட்னா: மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக 10 வாக்குறுதிகளை, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் பாட்னாவின் சதக்கத் ஆஸ்ரமத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி … Read more

நீட் தேர்வில் 99.99% பெற்ற மாணவர்! கல்லூரியில் சேரும் நாளன்று உயிரை விட்ட துயரம்..

NEET 99 Percent Scoring Teen Suicide : மும்பையில், 19 வயது மாணவர், நீட் தேர்வில் 99.99% பெற்று தேர்ச்சி பெற்றும், விபரீத முடிவை தேடிக்கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்க வேண்டும்” – தமிழிசை

சென்னை: ‘சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக, பாஜகவை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, மக்கள் பிரச்சினையைப் பற்றி கவலைப்படுவதில்லை. மதுரை அருகே விடுதி ஒன்றில் 14 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி சக மாணவர்களே கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதேபோல் திருச்சி … Read more

மாநில அந்தஸ்து கோரி லடாக் பாஜக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பாஜக அலுவலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB) தொடர்ந்து முன்வைத்து வருகிறது. மேலும், தங்கள் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் எல்ஏபி வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லியில் பிரபல சாமியார் தலைமறைவு

டெல்லி: டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி, பல மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். சைதன்யானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி, டெல்லி வசந்த் கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் மீது பதினேழு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப்/எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர். ஆகஸ்ட் … Read more

நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை

புதுடெல்லி: வட மாநிலங்​களில் நவராத்​திரி நாட்​களில் கர்​பா, தாண்​டியா எனும் கோலாட்​டங்​கள் நடை​பெறு​வது வழக்​கம். உத்​தர பிரதேசம், மத்​தி​ய பிரதேசம், ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) தேசிய செய்​தித் தொடர்​பாளர் ராஜ் நாயர் வெளி​யிட்ட அறி​விப்​பில், “கர்பா என்​பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழி​பாட்​டின் ஒரு வடிவம். சிலை வழி​பாட்​டில் நம்​பிக்கை இல்​லாதவர்​கள் இவற்​றில் பங்​கேற்க உரிமை இல்​லை. இது​போன்ற நிகழ்​வு​களில் இந்​துக்​கள் … Read more

பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் சிக்​கப்​பள்​ளாப்​பூர் மக்​கள​வைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்​களூரு​வில் தனது மனைவி பிரீத்தி (40) மற்​றும் 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பிரீத்​திக்கு வாட்ஸ் அப் மூலம் மும்​பையை சேர்ந்த மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். தன்னை மும்பை இணைய குற்​றப்​பிரிவு போலீஸ் அதி​காரி எனக் கூறிய அவர், ‘‘உங்​களது எச்​.டி.எஃப்​.சி வங்கி கணக்​கில் சட்​ட​விரோத நபர்​களு​டன் பணப் பரிவர்த்​தனை நடந்​துள்​ளது. அதி​லுள்ள பணத்தை … Read more

கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த 289 தொழிலாளர்கள் உயிரிழப்பு

புவனேஸ்வர்: ஒடிசா சட்​டப்​பேர​வை​யில் பிஜு ஜனதா தளம் எம்​எல்​ஏ​வின் கேள்விக்கு மாநில தொழிலா​ளர் நல அமைச்​சர் கணேஷ் ராம் சிங்​குந்​தியா அளித்த பதில் வரு​மாறு: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையி​லான கடந்த 5 ஆண்​டு​களில் ஒடி​சாவை சேர்ந்த 289 தொழிலா​ளர்​கள் பிற மாநிலங்​களில் பணி​யாற்​றும்​போது உயி​ரிழந்​தனர். இதே கால​கட்​டத்​தில், பிற மாநிலங்​களில் இருந்து ஒடிசா தொழிலா​ளர்​கள் 5,612 பேரை அரசு மீட்​டுள்​ளது. 2024-ம் ஆண்​டில் ஒடி​சா​வில் இருந்து 70,142 தொழிலா​ளர்​களை பணி​யமர்த்​து​வதற்​காக 1,037 ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு ஒடிசா அரசு … Read more

அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு

புனே: முன்னாள் வங்கி ஊழியரை, அவரது உறவினர் ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் மர்ம நபர்களையும் கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் சூர்யகாந்த் தோரட்(53). இவரை, அவரது உறவினர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்பு கொண்டு, தனது மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். அத்துறையின் சிறப்பு திட்டத்தில் … Read more