ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஜம்மு: பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். “ஹரியாணாவின் குருஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை … Read more

Crime: சாப்பாட்டுக்காக மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர்

Karnataka Tumkur Murder: ஆத்திரமடைந்த கணவன் புஷ்பலதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவரது தலையை அரிவாளால் துண்டித்து உடல் உறுப்புகளை சிதைத்துள்ளார். 

“மோடியின் வெறுப்பு பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்துக்கு கண்ணியக் குறைவு” – மன்மோகன் சிங் சாடல்

புதுடெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள கடைசி கட்ட பொதுத் தேர்தலின்போது பஞ்சாபில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் உரையாடல்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சமூகத்தில் பிளவை … Read more

உடல்நிலை ‘அரசியல்’ முதல் வி.கே.பாண்டியன் வரை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம்

புதுடெல்லி: “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வாக்குகளைப் பெறுவதற்காகவே எனது உடல்நிலை குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது” என்று ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக மிகவும் வெப்பமான சூழலில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் … Read more

எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது: பிரதமர் மோடி

ஹோஷியார்பூர்(பஞ்சாப்): எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் ஹோியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய விருப்பங்கள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கை ஆகியவற்றுடன் இன்று நாடு இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய அரசு ஹாட்ரிக் அடிக்கப் போகிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம், ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவுதான். … Read more

Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Massive Fire In Noida: நொய்டா குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் உள்ள கம்ப்ரசர் வெடித்ததால் பெறும் தீ விபத்து. 

2009 முதல் 2024 வரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104% உயர்வு 

கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை குறித்த ஆய்வை ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 368 கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. இந்த எண்ணிக்கை கடந்த 2014-ல் 464-ஆக உயர்ந்தது. 2019-ல் 677-ஆக அதிகரித்தது. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இது கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 104% உயர்வு. இந்த தேர்தலில் மொத்தம் 8,360 … Read more

தங்கக் கடத்தல் புகாரில் சசி தரூர் உதவியாளர் கைது: சிபிஎம் – காங்கிரஸை சாடும் பாஜக

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிவகுமார் பிரசாத். இவர் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என்று தன்னை சுங்கத் துறையினரிடம் கூறியிருக்கிறார். துபாயில் இருந்து வந்த ஒருவரை வரவேற்பதற்காக சிவகுமார் பிரசாத் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதற்கிடையே, துபாயில் இருந்து வந்த அந்தப் பயணி சிவகுமார் பிரசாத்திடம் சுமார் 500 கிராம் தங்கத்தை ஒப்படைக்க … Read more

‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப் பற்றி … Read more

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது

நியூயார்க்: இந்திய ராணுவ அதிகாரி மேஜர்ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது. ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா … Read more