வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக ஆந்திராவில் மாவட்டம்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்

விஜயவாடா: ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஆந்திராவுக்கு 25 கம்பெனிதுணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூன் 19-ம் தேதி வரைஅவர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன்4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது, வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு துணை எஸ்பி, டிஎஸ்பி போன்ற சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா நேற்று கூறினார். … Read more

பணியாளர் தேர்வாணையத்துக்கு பூட்டு போட்ட காங்கிரஸ் அரசு: பிரதமர் மோடி விமர்சனம்

இமாச்சலபிரதேசத்தின் சிம்லா தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்காஷ்யப்புக்கு ஆதரவாக சிர்மார் மாவட்டம் நஹான் என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: இமாச்சலபிரதேசத்தில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாநில பணியாளர் தேர்வாணையத்துக்கு மோசடி காங்கிரஸ் அரசு பூட்டு போட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளிடம் வகுப்புவாதம், ஜாதிவாதம் மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே பொது அம்சமாக … Read more

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசம்: 12.33% ஹரியாணா: 8.31% மேற்கு வங்கம் 16.64% பிஹார்: 9.66% டெல்லி: 8.94% ஒடிசா: 7.43% ஜார்க்கண்ட்: 11.74% காஷ்மீர்: 8.89% வாக்களித்த முக்கியப் பிரமுகர்கள்: தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் … Read more

“உங்கள் நாட்டின் மீது அக்கறை செலுத்துங்கள்” – பாக். முன்னாள் அமைச்சருக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்திட்ட பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். முன்னதாக, டெல்லியில் தனது மனைவி சுனிதா கேஜ்ரிவாலுடன் வாக்களித்த அரவிந்த் கேஜ்ரிவால், “நான் இன்று எனது மனைவி, குழந்தைகள், தந்தையுடன் வாக்களித்தேன். என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. … Read more

மே.வ. அதிகம், உ.பி குறைவு: இரவு 7.45 வரை 59.6% வாக்குப்பதிவு @ 6-ம் கட்ட தேர்தல்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இரவு 7.45 மணி நிலவரப்படி 59.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 52.02% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இரவு 7.45 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்: உத்தர பிரதேசம்: 52.02% ஹரியாணா: 55.93% மேற்கு வங்கம்: 77.99% பிஹார்: 52.25% டெல்லி: 53.73% ஒடிசா: 59.60%. ஜார்க்கண்ட்: 61.41% ஜம்மு – காஷ்மீர்: 51.35% … Read more

குஜராத் கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து: 12 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் … Read more

குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் … Read more

முதல் 5 கட்டங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நடப்பு மக்களவைத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவுகளை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று (மே 24) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட … Read more

“ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது” – அமித் ஷா

காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்): ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின் அரசியலே மாறிவிட்டது. இதற்கு முன், அரசியல் கட்சிகள், உண்மையான பிரச்சினைகளை மக்கள் முன் திரித்துப் பேசுவார்கள். … Read more

“நமது நிலத்தை ஆக்கிரமிக்கிறது சீனா… மோடியோ அமைதியோ அமைதி!” – கார்கே சாடல்

சிம்லா: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, “சிம்லாவின் அழகையும் சுற்றுச்சூழலையும் பார்க்கும்போது இது சிம்லாவா அல்லது சுவிட்சர்லாந்தா என்று எண்ணத் தோன்றுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். சுற்றுலா வளர்ச்சி அடைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும், … Read more