அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டம்தான் தேர்தல்: ராகுல் காந்தி பிரச்சாரம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மக்களவைத் தேர்தலையொட்டி வடகிழக்கு டெல்லியின் தில்ஷத் கார்டன் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரை கன்னையா குமாரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறது. பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர். இந்திய அரசியலமைப்பையோ, இந்தியக் … Read more

தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும்: தேர்தல் ஆணையம் வாதம் @ சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் வாக்களிக்க வருவதை குறைத்துவிடும் என்றும் வழக்கு ஒன்றின் வாதத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் 2 … Read more

பிஹார்: லாக் அப்பில் இருந்து 4 பேர் பலவந்தமாக விடுவிப்பு: ஆய்வாளர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: பிஹாரின் மதுபனி தொகுதி காவல்நிலைய சிறையில் பலவந்தாக புகுந்து 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை தடுக்காததுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 20 இல் மதுபனி மக்களவை தொகுதியின் ஜலே சட்டப்பேரவையின் கீழான வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் போலி வாக்குப்பதிவு செய்ததாகக் கைதாகினர். இவர்கள் அருகிலுள்ள ஜலே காவல்நிலையத்தின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநாள் இரவு காவல்நிலையம் வந்த ஒரு … Read more

இடஒதுக்கீட்டை பறிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஹரியாணாவின் மகேந்திரகர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இப்போதே இண்டியா கூட்டணி தோல்வியை உணரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடப்படுகிறது … Read more

‘பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்’ – மேற்கு வங்க ஆளுநர் மீது புகார்

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தனது அலுவலகத்தைப் பயன்படுத்துகிறார். குறிப்பாக, கடந்த ஜனவரி 23-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ராமர் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சியின் சின்னத்தை தனது மார்பில் பொருத்தி இருந்தார். ஆளுநரின் இந்த செயல் … Read more

கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? – மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஸ்வாதி மலிவால் விசாரணையில் … Read more

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் … Read more

பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. … Read more

சொகுசு கார் விபத்து: புனே சிறுவனின் ஜாமீன் ரத்து

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ‘Porsche Taycan’ சொகுசு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தினார் அந்த சிறுவன். விபத்தை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 … Read more

இண்டியா கூட்டணியில் பிரதமராகும் தலைவர் இல்லை: அமித் ஷா பிரச்சாரம்

மேற்கு வங்கத்தின் கட்டல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் எவரும் அதில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கான எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. இண்டியா கூட்டணியில் தலைவர்கள் எவரும் இல்லை. 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக பதவி வகிக்க இக்கூட்டணி விரும்புகிறது. இண்டியா கூட்டணியில் பிரதமராக வரக்கூடிய … Read more