பெங்களூரு | சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா சீருடை அணி​யாமல், வெளியே ஷாப்​பிங் சென்ற வீடியோ வெளி​யானது. கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, நடிகர் தர்​ஷன் ஆகியோ​ரும், ரவுடிகளும் சிறை​யில் சொகு​சாக இருப்​பது போன்ற வீடியோக்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பிரபல ரவுடி சீனி​வாஸ் சில தினங்​களுக்கு முன்பு தனது … Read more

சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான விவகாரம்: கேரள பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

திருவனந்தபுரம்: கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயிலில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்​லை என புகார் எழுந்தது. இது தொடர்​பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது. தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்​புப் பிரிவு அதி​காரி​களுக்கு நீதிப​தி​கள் … Read more

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்​சைப் பெற்று வந்த நோயாளி​கள், … Read more

அலிகர் கொலை வழக்கில் தலைமறைவான பெண் சாமியார் பூஜாவை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு, அதற்கு தீவைத்து எரித்​தவர். இந்த … Read more

நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை அரசின் … Read more

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி: முதல்வர் மம்தா இன்று நேரில் பார்வையிடுகிறார்

கொல்கத்தா: டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, … Read more

பிஹார் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு – இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் … Read more

நவ.6, 11-ல் பிஹார் பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறும்

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6. 11-ம் தேதிகளில் இருகட்டங்களாகநடத்தப்படும். நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறை வடைகிறது. இந்த நிலையில், மாநில சட் டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை டெல்லியில் தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று வெளியிட்டார். அப்போது, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: நேர்மை, நம்பகத்தன்மையுடன் வாக் காளர் பட்டியல் … Read more

“ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” – தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உடன் பேசினேன். இன்று முன்னதாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது … Read more

பிஹார் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகும் ஆறு தலைவர்கள் – ஒரு பார்வை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஹார் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போகும் 6 தலைவர்களை குறித்து பார்ப்போம். நரேந்திர மோடி: மக்களவைத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவை தேர்தல்கள் என்றாலும் சரி, வட மாநிலங்களில் பாஜகவின் கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான். பிஹாரிலும் மோடிதான் பாஜகவின் ஐகான். இதன் காரணமாகவே கடந்த சில … Read more