ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி: யார் இந்த படால் கெலாட்?

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, … Read more

போலி என்கவுன்ட்டர் புகாரால் மாவோயிஸ்ட் கமாண்டர் உடலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: போலி என்​க​வுன்​ட்டர் என புகார் அளிக்​கப்​பட்​ட​தால், மாவோ​யிஸ்ட் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை பாது​காத்து வைக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் கடந்த 22-ம் தேதி நடத்​திய என்​க​வுன்ட்​டரில் 2 மாவோ​யிஸ்ட்​கள் கொல்​லப்​பட்​டனர். இவர்​களில் ஒரு​வர் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி. ஆனால், போலி என்​க​வுன்​ட்டரில் தனது தந்தை கொல்​லப்​பட்​டதாக கதா ராமசந்​திர ரெட்​டி​யின் மகன் ராஜ சந்​தி​ரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் … Read more

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பேசியது என்ன?

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர் வழங்​கி​னார். பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநில அரசு சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பிஹாரில் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் தலா ஒரு பெண்​ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 … Read more

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்​கை​யின் வடமேற்​கில், தலைநகர் கொழும்​பு​வில் இருந்து 125 கி.மீ. தொலை​வில் நிகவெரட்​டியா என்ற இடம் உள்ளது. இங்​குள்ள வனம் மற்​றும் மலைப் பகு​தி​யில் புகழ்​பெற்ற நா உயானா புத்த மடால​யம் உள்​ளது. இந்த மடால​யத்​திற்கு செல்ல பழமை​யான கேபிள் கார் சேவை​யும் உள்​ளது. தியானப் பயிற்​சிகளுக்கு பெயர்​பெற்ற இந்த மடால​யத்​திற்கு உலகில் பல்​வேறு நாடு​களில் இருந்​தும் பலர் வந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில் புதன்​கிழமை இரவு இங்​குள்ள கேபிள் காரில் புத்த துறவி​கள் பயணித்​த​போது, கேபிள் திடீரென … Read more

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும்: உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

நொய்டா: சரக்கு மற்​றும் சேவை வரி​யில் (ஜிஎஸ்​டி) சீர்​திருத்​தங்​கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்​வ​தேச வர்த்தக கண்​காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறிய​தாவது: மக்​களின் சுமையை குறைக்​கும் வித​மாக மத்​திய அரசு வரி​களை கணிச​மாக குறைத்​துள்​ளது. பணவீக்​கத்தை கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது. இதனால், மக்​களின் வரு​மானம் மற்​றும் சேமிப்பு இரண்​டும் அதி​கரித்​துள்​ளது. ரூ.12 லட்​சம் வரை வரு​மான வரி விலக்கு அளிப்​ப​தன் மூல​மும், … Read more

மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள்: ஓர் ஆயுத விநியோகஸ்தர் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் மற்றும் ஓர் ஆயுத விநியோகஸ்தரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: இம்பால் மேற்கு மாவட்டம் பானா பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட பிரெபெக் என்ற தீவிரவாத அமைப்பின் ஓர் உறுப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் ஒருவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோல விஷ்ணுபூர் மாவட்டம் ட்ராங்லோபி பகுதியில், … Read more

கைதி இறப்பு சம்பவத்தில் தலைமறைவான போலீஸார் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு

போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி. இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், … Read more

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு: சுற்றுலா பயணிகளின் வருகையால் களைக்கட்டியது தசரா

பெங்களூரு: மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்​னிட்டு விஜயதசமி காலத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​படு​கிறது. தற்​போது 415-வது ஆண்​டாக தசரா … Read more

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரி​வாலுக்கு இன்று முதல் 10 நாட்​களுக்​குள் பொருத்​த​மான வீடு ஒதுக்​கப்​படும். இதை நீங்​கள் பதிவு செய்து கொள்​ளலாம்’’ என்று தெரி​வித்​தார். இந்​தப் பிரச்​சினை விரை​வில் சுமூக​மாக … Read more

மகளிர் வாக்குகளை குறிவைத்தே பிஹார் அரசு ரூ.10,000 நிதியுதவி: பிரியங்கா காந்தி சாடல்

பாட்னா: பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்களுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு ரூ.10,000 அளித்துள்ளது என பிரியங்கா காந்தி வத்ரா விமர்சித்துள்ளார். பிஹார் அரசின், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்க விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் … Read more