இலவச, மானிய விலை மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட்டு மானியம் வழங்கவேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சென்னை: இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் பயன்பாட்டை துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை மின்வாரியம் வழங்கி வருகிறது. இவை தவிர, குடிசை வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு முழுவதும் இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட்டும், விசைத்தறிக்கு 1000 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக … Read more

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி20 சுற்றுலாத்துறை மாநாடு!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி 20 சுற்றுலாத் துறை மாநாடு நடக்கப் உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு குழுக்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஜி 20 மாநாட்டுக்கு வரும் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் குல்மார்க் பனிச்சறுக்கு மையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

சிறுமி என கூட பாராமல் ஆடைகளை கழட்ட சொன்ன பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது..!!

மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது மகளை பாஜகவை சேர்ந்த ராகுல் சித்லானி (25) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் பாஜகவின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கட்சி நியமித்தது. அவரை தற்போது அந்த பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது. இதுகுறித்து எப்.ஐ.ஆர். புகாரில், … Read more

இன்று முதல் சேவையை நிறுத்தும் பிரபல விமான நிறுவனம்…!

பட்ஜெட் விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இரு காரணம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோ பர்ஸ்ட் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை.இதுமட்டுமல்லாமல், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் & விட்னி (PRatt & Whitney) நிறுவனம் விமான எஞ்சின்களை வழங்காமல் தாமதித்து வருகிறது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தி 28 விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த … Read more

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பிரபல பட்டு ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

ஹைதராபாத்: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 4 மாநிலங்களில் சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தின் பட்டு ஜவுளி கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் எழுந்ததால், நேற்று ஒரே நாளில், சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் பட்டுப் புடவை கடைகளான கலாமந்திர், மந்திர், காஞ்சிபுரம் வர மஹாலட்சுமி ஆகிய கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், ஹைதராபாத், … Read more

டெல்லி முதலமைச்சர் வீட்டின் முன்பு பாஜகவினர் காலவரையற்ற தர்ணா…!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு பாஜகவினர் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை மறுசீரமைப்பு செய்ய கொரோனா காலக்கட்டத்தில், 45 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, கெஜ்ரிவால் வசித்து வரும் வீடு 1942ம் ஆண்டில் கட்டப்பட்டது என்பதால் தற்போது புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர், துணைநிலை ஆளுநரின் வீட்டை புதுப்பிக்க இதைவிட அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். Source link

பிஹாரில் 1.23 கோடி 100 நாள் வேலை அட்டை ரத்து

பாட்னா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2005-ல் அமலுக்கு வந்தது. கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது. இந்த திட்டம் குறித்து பிஹார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் நேற்று கூறியதாவது: பிஹாரில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 626 அட்டைகள் … Read more

200 யூனிட் இலவச மின்சாரம்.. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பெங்களூருவில் வெளியிட்டார். அதில் மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் அரசு துறையில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. Source link

அமலாக்கத் துறை சோதனை: சட்டவிதிகளை மீறவில்லை பைஜுஸ் நிறுவனர் விளக்கம்

பெங்களூரு: சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பைஜுஸ் நிறுவனம் இயங்கி வருவதாக அதன் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பைஜு ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ரவீந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நியச் செலாவணி சட்டங்களை முழுமையாக பின்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பரிவர்த்தனைகள் அனைத்தும் எங்களின் முதலீட்டு நிதி ஆலோசகர்கள் மற்றும் பங்குதாரர்களால் முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன. பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் வழக்கமான வங்கி நடைமுறைகளின்படி … Read more

“அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும்” – பாலச்சந்திரன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதாலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார். வங்க கடலில் வரும் 6, 7-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு … Read more