ராகுல் பதவி இழப்பு குறித்து ஜெர்மனி வெளியுறவு துறை கருத்து: காங்கிரஸுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்திய நீதித் துறையில் அந்நிய சக்திகள் தலையிட முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஎம்பி பதவியை இழந்துள்ளார். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறும்போது, “ராகுல் காந்தி மீதான தீர்ப்பு,அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டுள்ளோம். அவர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்திய நீதித் துறையின் நேர்மை, இந்தியாவின் ஜனநாயக கொள்கைகள் … Read more

கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு : ராம நவமி விழாவில் சோகம்; நிவாரணம் அறிவிப்பு!!

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில்  பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் … Read more

நாளை முதல் தங்க நகை விற்பனையில் மிகப்பெரிய மாற்றம்!!

நாளை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதால் தங்க நகை விற்பனையில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. தங்க நகைகளில் 6 இலக்க எண் கட்டாயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும். ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும். … Read more

கோவில் கிணற்றின் படிக்கட்டு சரிந்து விழுந்த விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தன. படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். இதில் 18 பேர் உயிரிழந்தனர். கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.  Source link

ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் மம்தா தர்ணா போராட்டம்

கொல்கத்தா:  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.  … Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை நாளை முதல் உயர்வு!!

புதிய நிதி ஆண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது. மருந்துகள் விலை உயர்வு அத்தியாவசிய மருந்துகளின் விலையை நாளை முதல் உயர்த்த மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது. காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை … Read more

நாளை முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!!

நாடு முழுவதும் நாளை சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. புதிய நிதி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்துள்ளது. தங்க நகைகளில் 6 … Read more

மத்திய பிரதேசத்தில் ராமநவமி விழாவில் பரிதாபம்: கோயில் கிணறு சுவர் இடிந்து விழுந்து 13 பக்தர்கள் உயிரிழப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பக்தர்கள் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக … Read more

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லிக்கு எச்சரிக்கை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை முகக்கவசம் அணியுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் தற்போதைய மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் டெல்லி அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  … Read more

உலகளாவிய ஊழல்வாதிகள் பிரதமரின் பாதுகாப்புக்கு வருகிறார்கள்: காங். சாடல்

புதுடெல்லி:    ஊழல் மற்றும் நிதி மோசடியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசும் ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக லண்டனில் பதுங்கி உள்ள  ேமாசடி தொழிலதிபர் லலித்மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால்,‘‘ லலித் மோடி பல கோடி ரூபாய் மோசடியில் இருந்து கோழைத்தனத்தினால்  தப்பியோடியவர். பாஜவின் செயலற்ற தன்மை காரணமாக அவர் இப்போது வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அவர் கூறுவதை யாராவது தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்று அவர் நினைப்பது … Read more