கேரளா, கர்நாடகா, பிஹாரில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாட்னா சென்றார். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த சதி திட்டத்தை முறியடித்தனர். … Read more

அண்ணா கேன்டீனுக்கு இலவச நிலம் வழங்கிய சந்திரபாபு நாயுடு

குப்பம்: ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு ‘அண்ணா கேன்டீன்’ திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், ஆட்சி மாறியதால், திறக்கப்பட்ட அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டன. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர் சொந்த செலவில் சில முக்கிய நகரங்களில் திறந்த அண்ணா கேன்டீன்களை ஜெகன் அரசு மூடியது. இதனிடையே, குப்பம் பஸ் நிலையம் அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் அண்ணா கேன்டீனை திறந்தனர். இங்கும் பிரச்சினை தலை தூக்கியதால், அண்ணா கேன்டீனுக்காக சந்திரபாபு நாயுடு 20 சென்ட் … Read more

தம்பதிகளுக்கான பரிசில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் – ம.பி. அரசின் இலவச திருமண திட்டத்தில் சர்ச்சை

புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006-ல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ‘கன்ய விவாஹ் யோஜ்னா’ எனும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருடந்தோறும் ஏழைப் பெண் களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ரூ.55,000 தொகையும் அளிக்கப்படும் இத்திட்டத்தில் சமீப ஆண்டுகளாக சர்ச்சைகள் கிளம்பி விட்டன. தற்போது, ஜாபுவா மாவட்டத்தின் தண்ட்லாவில் 296 பெண்களுக்கு இலவச திருமணத்தை அரசு நடத்தியது. அப்போது புதுமணத் … Read more

'நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்து தேசிய உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்தது' – ராஜஸ்தானில் பிரதமர் மோடி சாடல்

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் ஒரு மாத கால பான்-இந்தியா பிரச்சாரமான ‘மஹா ஜன்சம்பர்க்’-ஐ பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கிவைத்தார். இதில் பேசிய பிரதமர் மோடி, “ஒன்பது ஆண்டுகால பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துள்ளது. 2014க்கு முன், நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் … Read more

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021-22 நிதியாண்டுக்கு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். இதையடுத்து சிசோடியாதனது பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு கடந்த மார்ச் … Read more

செல்போனுக்காக அணையில் தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்ட சத்தீஸ்கர் அரசு அதிகாரிக்கு ரூ.53,000 அபராதம்

ராய்ப்பூர்: செல்போனை கண்டுபிடிக்க அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்ட சத்தீஸ்கர் அரசு அதிகாரிக்கு ரூ.53,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மநிலம், கான்கெர் மாவட்டம், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் கெர்கட்டா-பரல்கோட் அணைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள தடுப்பணையில் செல்பி புகைப் படம் எடுத்தபோது அவரது செல்போன் தண்ணீரில் தவறி விழுந்தது. அந்த செல்போனின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். அரசு அதிகாரி என்ற வகையில் தனது செல்வாக்கை … Read more

பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் ரெடி… பிரிஜ் பூஷன் சிங் பகீர்!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்! இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் … Read more

மகிழ்ச்சியில் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்! அகவிலைப்படி உயர்வு 31 அல்ல 35%

Karnataka Government DA Hike: அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தியது கர்நாடக அரசு

கூட்டுறவுத் துறை மூலம் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு முறை: ஐஎம்சி குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐஎம்சி) அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதன் மூலமாக கூட்டுறவுத் … Read more

யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்? பாலியல் சர்ச்சையும், பின்னணி அரசியலும்!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடிய முக்கியமான விளையாட்டுகளை ஒன்றாக திகழ்கிறது மல்யுத்தம். இந்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் தான் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவரும், சில பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் தான் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர்கள் போராட்டம் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் … Read more