டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு: நாடு முழுவதும் ஜன.1ம் தேதி முதல் அமல்..!

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு ரூ. 214 … Read more

சிபிஐ கைதுக்கு எதிராக சந்தா கோச்சார் மனு: அவசர வழக்காக விசாரிக்க மும்பை ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சிபிஐ-யின் கைது நடவடிக்கைக்கு எதிர்த்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த வாரத்தில் சிபிஐ கைது செய்தது. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக … Read more

தாயின் இறுதி ஆசை… ICU-வில் திருமணம் செய்து கொண்ட மகள்.. அடுத்து நடந்த துயரம்

பிகாரில் உடல்நிலை சரியில்லாமல் மரண படுக்கையில் கிடந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஐசியு-வில் தாயின் முன்பு ஒரு மகள் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பிகார் மாநிலம் குராரு தொகுதி பாலி கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் குமாரி வர்மா. இவருக்கு உடல்நிலை மோசமாகி கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூனம் குமாரியின் உடல்நிலை மேலும் மோசமாகி … Read more

கொரியர் கடையில் கொரியரில் வந்த மிக்சி வெடித்து விபத்து.. உரிமையாளரின் வயிற்றை துளைத்த மிக்சியின் பாகங்கள்..!

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள கொரியர் கடையில் கொரியரில் வந்த மிக்சி வெடித்ததில் கடை உரிமையாளர் படுகாயமடைந்தார். கே.ஆர்.புரம் பகுதியில் சசி என்பவர் நடத்தி வரும் கொரியர் கடையில் வெடி சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது கடை முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டதோடு, சசி கை விரல்கள் சேதமடைந்து, காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசியிடம் விசாரணை நடத்தியதில், கொரியரில் … Read more

கர்நாடகாவில் பரபரப்பு: பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் உரிமையாளரின் கை சிதைந்தது..காவல்துறை விசாரணை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஹாசன் நகரை அடுத்த கே.ஆர்.புரத்தில் சசி என்பவர் கூரியர் மையத்தை நடத்திவருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் மையத்தில்  பணியில் இருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. சத்தம்கேட்டு அரண்டுபோன அக்கம்பக்கத்தினர் கூரியர் மையத்திற்கு சென்று பார்த்தனர் … Read more

ஒரேநாளில் ஜே.பி.நட்டா வருகை – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஏன்? அண்ணாமலை பதில்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக கோவையில் இருந்து அதனை தொடங்குகிறார். இந்நிலையில் டெல்லியில் வானிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து கிளம்புவதற்கு தாமதமாகி நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வரவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நட்டாவை வரவேற்பதற்காக கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை இன்று செய்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தும் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் … Read more

கரோனாவை எதிர்கொள்ள நாடு முழுவதும் பயிற்சி ஒத்திகை: டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியா தாயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி ஒத்திகை நடத்தப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகையை நேரில் ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் லட்சக்கணக்கான பேர் ஒமிக்ரானின் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு … Read more

வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி : தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பனிப்பொழிவு வீசும் மற்றும் டெல்லி, சண்டிகர், வட ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு உ.பி., அரியானாவில் இன்று கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி பங்கேற்பு?

ஜனவரி முதல் வாரத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை `இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை முன்னிறுத்தி ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 9 மாநிலங்களில் 46 மாவட்டங்கள் வழியாக 108 நாட்கள் கடந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்திருக்கிறது. ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் … Read more

நூறு நாள் வேலைத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு: ஜனவரி 1-ல் தொடக்கம்

புதுடெல்லி: நூறு நாள் வேலைத்திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி ஒன்று முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் … Read more