மக்களவை தேர்தல் 2024 – காங்கிரஸுக்கு நிபந்தனை விதிக்க எதிர்க்கட்சிகள் ஆதரவை தேடும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி புதிய உருவம் எடுக்கிறது. இதில், காங்கிரஸுக்கு முன் நிபந்தனைகள் விதிப்பது தொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். பாஜகவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸுடன் கைகோக்க திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ், ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் … Read more

லஞ்சம் வாங்கியதற்காக சிக்கிய விஏஒ உதவியாளர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், டெபாசிட் ஆவணங்கள் பறிமுதல்..!

கேரளாவில், 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் டெபாசிட் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், பாலக்காயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கள உதவியாளராக பணிபுரிந் துவந்த சுரேஷ் குமார் என்பவர் லஞ்சம் வாங்கியதாக, கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கட்டுக்கட்டாக 35 லட்சம் … Read more

சித்தராமையா மேடையில் குவிந்த எதிர்க்கட்சி தலைவர்கள் – மக்களவை தேர்தலில் பலன் தருமா?

புதுடெல்லி: கடந்த 2018-ல் மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்றார். அந்த விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். இதேபோன்ற ஒரு காட்சி கடந்த 20-ம் தேதி காங்கிரஸ் முதல்வரான சித்தராமையாவின் பதவி ஏற்பிலும் காண முடிந்தது. பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி, பாரத் … Read more

பிறப்பு – இறப்பு விவரம் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு..? – அமித்ஷா

பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் அமித்ஷா, இதனை தெரிவித்தார். பிறப்பு சான்றிதழ் அடிப்படையில், ஒருவருக்கு 18 வயது நிறைவடைந்தவுடன், தேர்தல் ஆணையமே அவரைத் தொடர்பு கொண்டு வாக்காளர் அட்டையை வழங்கும் என்றும், ஒருவரின் மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பு … Read more

தேசத்தின் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக மல்யுத்த வீரர்களை பாதுகாப்பிற்காக போராட வைத்துவிட்டோம்..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதமாக வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் … Read more

ராகுல் காந்தியின் பின்னிரவு லாரி சவாரி: ஓட்டுநர்களின் பிரச்சினைகளை அறிய டெல்லி – சண்டிகர் பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பின்னரவில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் இருந்து ஆம்லா சென்ற லாரி ஓட்டுநர்களுக்கு எல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களைக் கடந்து சென்ற, அவர்கள் கடந்து சென்ற லாரி ஒன்றில் ராகுல் காந்தி ஓட்டுநருக்கு அருகில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்தார். லாரி ஓட்டுநர்களின் பிரச்சினைகள் … Read more

நீண்டதூரம் சென்று தண்ணீர் கொண்டுவந்த தாய்.. கிணறு வெட்டி கொடுத்து தாயின் துயரைப் போக்கிய மகன்..

மஹாராஷ்ட்ராவில் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தாய் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்த 14 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டியுள்ளான். பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த பிரணவ் என்ற அந்த சிறுவன், தனி ஆளாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட, நிலத்தில் இருந்த பெரிய கற்களை அகற்ற மட்டும், அவனது தந்தை உதவியுள்ளார். கிணற்றில் 20 அடி ஆழத்தில் … Read more

வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பயங்கரவாதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது – ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

ஸ்ரீநகர்: வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆற்றிய உரை விவரம்: “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஊக்குவிப்பு காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் அமைதியை இழந்தது. இந்த பயங்கரவாதத்தால் ஏறக்குறைய எல்லா மதத்தவர்களும் … Read more

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? மல்யுத்த கூட்டமைப்பு தலைவரின் சவாலை ஏற்ற மல்யுத்த வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகள் அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என தெரிவித்துள்ளனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்ற பிரிஜ் பூஷண், தம்மைப் போல வீராங்கனை வினேஷ் போகத்தையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், வினேஷ் போகத் மட்டுமின்றி புகார் தெரிவித்த அனைத்து … Read more

தேசிய கால்பந்து வீராங்கனை டு ஐஏஎஸ்… இரண்டு தோல்விகளில் இருந்து மீண்டு முதல் ரேங்க் எடுத்த இஷிதா

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர். இஷிதாவின் தந்தை விமானப்படை அதிகாரி. அவரின் தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சகோதரர் ஒருவரும் இருக்கிறார், அவர் வழக்கறிஞர். 26 வயதாகும் இஷிதா யுபிஎஸ்சி தேர்வெழுதுவது இது மூன்றாவது முறையாகும். டெல்லி … Read more