தேசிய கால்பந்து வீராங்கனை டு ஐஏஎஸ்… இரண்டு தோல்விகளில் இருந்து மீண்டு முதல் ரேங்க் எடுத்த இஷிதா

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர். இஷிதாவின் தந்தை விமானப்படை அதிகாரி. அவரின் தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சகோதரர் ஒருவரும் இருக்கிறார், அவர் வழக்கறிஞர். 26 வயதாகும் இஷிதா யுபிஎஸ்சி தேர்வெழுதுவது இது மூன்றாவது முறையாகும். டெல்லி … Read more

கர்நாடக தேர்தல் வெற்றியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் வெல்ல காங்.வியூகம்.. வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதி

மத்திய பிரதேச தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய், 500 ரூபாய்க்கு மானிய விலையில் சிலிண்டர், 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட் வரை பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது போன்ற பல அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கர்நாடக தேர்தல் … Read more

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: டாப் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கரிமா லோஹியா இரண்டாவது இடமும், உமா ஹாரதி.என், ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களை மயூர் ஹசாரிகா, கஹானா நவ்யா ஜேம்ஸ், வசீம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் … Read more

டெல்லியிலிருந்து சண்டீகருக்கு லாரியில் சென்ற ராகுல் காந்தி..!

டெல்லியிலிருந்து சண்டீகர் வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லாரி ஒன்றில் பயணம் மேற்கொண்டார். சிறிது தூரம் லாரியை ஓட்டிய ராகுல் காந்தி, பின்னர் லாரியின் பக்கவாட்டு இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்தார். சாலையில் தம்மை அடையாளம் கண்டவர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்தார். இரவு நேரத்தில் கனரக வாகன டிரைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவே ராகுல் காந்தி லாரி பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். Source link

உலகின் மிகப் பெரிய ‘இளம் திறமைத் தொழிற்சாலை’ இந்தியா: ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி: திறமைமிக்க இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார். மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களை சிட்னி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2014-ம் ஆண்டு நான் சிட்னி நகருக்கு வந்து உங்களைச் சந்தித்தேன். அப்போது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்னி வந்த முதல் இந்தியப் பிரதமராக நான் இருந்தேன். இந்தியப் பிரதமரை மீண்டும் … Read more

காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து ரகளை செய்த நடிகை..! காதலனுடன் சேர்ந்து கைவரிசை

காவல் ஆணையரின் காரை தனது காரால் மோதியதோடு, காலால் எட்டி உதைத்து ரகளை செய்ததாக விஷால் பட நாயகி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். நடிகர் விஷாலுடன் வீரமே வாகை சூடும் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை டிம்பிள் ஹயாதி..! கவர்ச்சியான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை கிரங்கடித்து வரும் டிப்பிள் தனது வீரத்தை, ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரிடம் காட்டியதால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் … Read more

ஜம்மு காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடத்தி வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது. இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கிஷன் … Read more

கண்ணிவெடித் தாக்குதலில் இரு கால்களை இழந்த நபர் 29,030 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை….!

கண்ணிவெடித் தாக்குதலில் இரு கால்களையும் இழந்த நபர், 29 ஆயிரம் அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஹரி புத்த மகர், 20 வயதில் பிரிட்டன் ராணுவத்தில் இணைந்தார். ஆப்கானிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி தாக்குதலில் இரு கால்களையும் இழந்தார். மனம் தளர்ந்து முடங்கிவிடாத புத்த மகர், மலையேற்றம், ஸ்கை டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திவந்தார். ஐரோப்பாவின் உயரமான மாண்ட் பிளாங்க் சிகரம், ஆப்ரிக்க கண்டத்தின் உயரமான … Read more

வாட்ஸ் அப்பில் செம அப்டேட் கொண்டு வந்த மெட்டா..!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. … Read more

டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் வெளியிடப்படும்: மத்திய இணை அமைச்சர் தகவல்

மும்பை: டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு … Read more