புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் கடலில் உயிர்காக்கும் கவசம் அணிந்துதான் குளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.   

ராகுல் காந்திக்காக என் பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே..!!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீசை ராகுல் காந்திக்கு அனுப்ப மக்களவைக்கான பங்களா ஒதுக்கீடு குழு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நோட்டீசை மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு … Read more

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் தேர்தல்: திருச்சி சிவா 42, தம்பிதுரை 18 வாக்குகள் பெற்று தேர்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஏழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், அதிக வாக்குகளாக திமுக எம்.பி. திருச்சி சிவா 42, அதிமுக எம்.பி. தம்பிதுரை 16 வாக்குகள் பெற்று உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இவற்றில் நிதிக்கான மூன்று குழுக்களாக பொதுக் கணக்கு குழு, மதிப்பீடு குழு மற்றும் பொதுத்துறைகளுக்கானக் குழு இடம் பெற்றுள்ளன. இந்த மூன்றில் எம்.பி.க்கள் இடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பொதுக் … Read more

குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன – பிரதமர் மோடி பேச்சு

குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் காங்கிரசின் தலைமையின் கீழ் ஓரணியில் திரண்டிருப்பதாக பிரதமர் மோடி சாடியுள்ளார். டெல்லியில், விரிவாக்கம் செய்யப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய மோடி, ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட மதிக்காத எதிர்க்கட்சிகளின் போக்கைக் கண்டித்தார். வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, கடுமையான உழைப்பால் இன்று முந்நூறுக்கும் மேற்பட்ட எம்பிக்களுடன் இந்தியாவின் பலம் வாய்ந்த ஒரே கட்சியாகத் திகழ்வதாக மோடி … Read more

பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.  ஆப்பிரிக்க நாட்டின் ராணுவ தளபதிகள் உள்பட 10 நாடுகளின் ராணுவ தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, “ஆப்பிரிக்க நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி  அளிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.  … Read more

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய ராகுல் இப்போது கோழை இல்லை என்கிறார் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய ராகுல், இப்போது தான் ஒரு கோழை இல்லை என்று கூறுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கோரமாட்டார்” என்றார். … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: இன்று தேதி அறிவிக்கும் தேர்தல் ஆணையம்!

தென்னிந்தியாவில் பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பெரிதும் காத்திருந்தன. அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும்.

ஜம்மு காஷ்மீரில் மோசடி செய்து கைதான கிரண் பட்டேலின் மனைவி மாலினி பட்டேலை கைது செய்த போலீசார்..!

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஜம்மு காஷ்மீரில் மோசடி செய்து கைதான கிரண் பட்டேலின் மனைவி மாலினி பட்டேலை அகமதாபாதில் போலீசார் கைது செய்துள்ளனர். தங்கள் பங்களாவை சட்டவிரோதமாக கைப்பற்றியதாக முன்னாள் குஜராத் அமைச்சரின் சகோதரர் ஜகதீஷ் சவடா என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பரூச் மாவட்டத்தில் தங்கியிருந்த மாலினி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஸ்ரீநகர் விடுதியில் போலி … Read more

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை கோரிய வழக்கில் மே மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தேர்தல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சியை நடத்தவும் தடை விதிக்கக் கோரிய வழக்கை வரும் மே மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்கீல் அஸ்வினி உபாத்யாய் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தற்போது கொலை, கற்பழிப்பு, கடத்தல், பணமோசடி, கொள்கை, தேச துரோகம் போன்ற கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் கூட அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவோ … Read more

எகிறிய EB பில்.. பணம் கட்டாததால் கட்டில், பைக் பறிமுதல்.. அரை நிர்வாணத்தில் ஓடிய மூதாட்டி!

மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர … Read more