புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் கடலில் உயிர்காக்கும் கவசம் அணிந்துதான் குளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.