ம.பி.யில் மூத்த குடிமக்களுக்கு நிதியுதவி: புனித யாத்திரைக்கான விமானப் பயணம் தொடக்கம்

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆளும் பாஜக அரசு பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குடிமக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் விமானம் மூலம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் “முக்யமந்திரி தீர்த்-தர்சன் யோஜனா” திட்டத்தை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று காலை போஜ் விமான நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். … Read more

தாய்க்காக கிணறு தோண்டிய 14 வயது சிறுவன்

பால்கர்: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கெல்வே கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாய தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகன் பிரணவ் சல்கர் (14) 9-ம் வகுப்பு படிக்கிறார். பிரணவ் சமீபத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை, மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து, தனது குடிசையில் விளக்கெரிய வைத்தான். இந்நிலையில், தனது தாய் நீண்ட தூரம் சென்று ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளான். கடப்பாரை, மண்வெட்டி, … Read more

தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் – பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் என்று பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாரில் பி.எம். மித்ரா பார்க் என்ற பெயரில் பிரம்மாண்டமான ஜவுளிப் பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிவிட்டர் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலளித்து மோடி தமது டிவிட்டரில் மாநில அரசுக்கு … Read more

நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை: துவாரகா 2024 ஏப்ரலில் தயாராகிவிடும் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை, துவாரகா அடுத்தாண்டு ஏப்ரலில் தயாராகிவிடும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் முதல் 8 வழி விரைவு சாலை ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படுகிறது. 34 மீட்டர் அகலம் உள்ள இந்த விரைவுச் சாலை ஒரு தூண் பாலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ … Read more

ரஷ்யாவுக்கு இந்தியா ஆயுதங்கள் அனுப்பியதற்கான ஆதாரம் இல்லை.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி!

உக்ரைனின் பக்முத் நகரத்தை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்தினரின் ரகசியத் தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றார். நிலைமை கடினமாக இருப்பதாகவும், பொதுமக்கள் சுற்றி வளைக்கப்பட்டால் கடினமான சூழ்நிலை ஏற்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் பக்முத் நகரின் அழிவுகள் ஹிரோஷிமாவை நினைவூட்டுதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து … Read more

ரூ. 2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் ஏதும் தேவையா ?

செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை நாளை 23-ம் தேதி செவ்வாய்க் கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி நாள் … Read more

இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர்..!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில கவர்நர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதே போல் கர்நாடக மாநில துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் … Read more

ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவருடைய 32-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே ராகுல் காந்தி, “என்னுடைய தந்தையின் … Read more

மத்திய அரசின் அவசர சட்டத்தின் மூலம் டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ)உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த … Read more

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் – சந்திரபாபு நாயுடு வரவேற்பு

விசாகப்பட்டினம்: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமையன்று இரவு அவர் அனகாபல்லியில் மாபெரும் கூட்டத்தில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி பேசினார். அப்போது மக்கள் மத்தியில் அவர் … Read more