இன்று கூடும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி7 … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடம் | மே 28-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்

புதுடெல்லி: ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் ஹெச்சிபி டிசைன் வழங்கியது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்தியஅரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன் அணியும் முதலை தோல் காலணி ரூ.1.35 லட்சம் – தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

அமராவதி: மாதம் ஒரு ரூபாய் ஊதியம் பெறும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அணிந்திருக்கும் காலணிகளின் விலை ரூ. 1,34,800. அவர் வைத்திருக்கும் பேனாவின் விலை ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல். அவர் அருந்தும் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.5,499 (ஒரு பாட்டில் 750 மி.லி கொள்ளளவில் மொத்தம் 45 பாட்டில்கள் கொண்ட பெட்டி) என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் வெங்கடரமணா ரெட்டி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இது தற்போது … Read more

Work From Road: பெங்களூருவில் புதிய வேலைக் கலாசாரம்? ரோட்டில் இருந்து வேலை பார்க்கலாமா?

Bengaluru Work From Road: போக்குவரத்து நெரிசலால் விரக்தியடைந்த பெங்களூரு மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று வேதனையுடன் சொல்லும் செய்தி டிரெண்டிங் ஆகிறது

ஜஸ்ட் மிஸ்.. டீ சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர் செல்போன் திடீரென தீப்பற்றியது..! பரபரப்பு வீடியோ

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 76 வயது முதியவர் இன்று காலை தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடித்ததால் தீக்காயங்களில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும், மொபைல் போன் திடீரென வெடித்தது மற்றும் அந்த நபர் இங்குள்ள மரோட்டிச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி, டிவி சேனல்களிலும் காட்டப்பட்டது, அதில் அந்த நபர் … Read more

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு.!

கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்நாடகாவின் … Read more

அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு முக்கியத் துறை பின்னணியில் ராஜஸ்தான் அரசியல்?

புதுடெல்லி: அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு (69) முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்துறை அளிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜஸ்தான் அரசியல் உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவை அடுத்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. இம்மாநிலத்தில் சுமார் 16 சதவீதம் உள்ள தலித் வாக்குகளில் மேக்வால் சமூகத்தினர் சுமார் 60 சதவீதமாக உள்னர். இதனால் மேக்வால் சமூக வாக்குகள் ராஜஸ்தானில் பாஜகவிற்கு வெற்றியை தேடித்தரும் … Read more

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம் – கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டு, புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராஜஸ்தானை சேர்ந்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் 2021 ஜூலையில் மாற்றப்பட்டு, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜுஜு, சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், நீதித் … Read more

பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்.. வெடி பொருட்களை கைப்பற்றி அழிப்பு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அங்கிருந்த வெடி பொருட்களை கைப்பற்றி அழித்தனர். பயங்கரவாத தடுப்பு சிறப்பு நடவடிக்கை குழுவும், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையும் இணைந்து சலானி பகுதியில் தீவிரவாத தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டன. அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் வெடி பொருட்கள் இருந்ததை ராணுவத்தின் மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. வெடி பொருட்களை அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். Source link

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை கூடுகிறது ஜி-7 மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை கூடவுள்ள ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் … Read more