‘ராகுல் காந்திக்கு இது அதிகம்..’ – வாஜ்பாயை மேற்கோள் காட்டிய பிரசாந்த் கிஷோர்.!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது அதிகம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், கடந்த காலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தலில் பணியாற்றியுள்ளார். பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற 2014 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு சார்பாக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரை குஜராத் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கும் வந்தது நற்செய்தி… அகவிலைப்படி உயர்வு!

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. மேலும், ஜனவரி 1, 2023 முதல் செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை … Read more

சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி: சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களில் யாரேனும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அவர்கள் உறுப்பினர் தகுதியை இழப்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளின்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனதாக … Read more

ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் மாறாத ராகுல் காந்தி

புதுடெல்லி: ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் ராகுல் காந்தி மாறவில்லை. அதன் காரணமாகவே இப்போது அவர் எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. … Read more

இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி..? பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன் ஆஜர்

இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணைக்காக, பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன்பும், அவரது சகோதரியும், ராஸ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி-யுமான மிசா பாரதி அமலாக்கதுறை முன்பும் ஆஜராகினர். இதுவரை 3 முறை சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், இந்த மாத விசாரணையின் போது தேஜஸ்வியை, கைது செய்யமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் விசாரணைக்கு ஆஜரானார். இதே வழக்கு விசாரணைக்காக, தேஜஸ்வியின் … Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதேபோல் … Read more

வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி ஏப்ரலில் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலை ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019-ல் அறிமுகம் செய்தது. இதன் முதல் சேவையை, புதுடெல்லி – வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ல் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு … Read more

எம்.பி, எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவியை தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)- ஐ எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்களை தன்னிச்சையாக தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 8(3), அதிகாரத்தை மீறிய ஷரத்து என்றும், இது எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பேச்சு சுதந்திரத்தை குறைப்பதுடன், அவர்களின் கடமையை தடுக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், கடந்த 2013-ல்  உச்சநீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 8(4) ரத்து … Read more

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பதிப்பில் 6.3 % தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே … Read more

கர்மவினை அவரை திருப்பித் தாக்கியுள்ளது: ராகுலின் தகுதி நீக்கம் குறித்து அஸ்ஸாம் முதல்வர் கருத்து

குவாஹாட்டி: “தகுதி நீக்கத்திற்கு எதிரான அவசரச்சட்ட மசோதாவை ராகுல் காந்தியே கிழித்துப் போட்டார். அவருடைய கர்மவினை அவரைத் திருப்பி தாக்கியுள்ளது. இதில் எங்களுடைய தவறு என்ன இருக்கிறது?” என்று அஸ்ஸாம் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தகுதி நீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும் உறுப்பினர்கள், உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு … Read more