இலங்கையில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிந்தது: ஏப்ரலில் தேர்தல் நடக்காது என தகவல்

கொழும்பு:  இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சிகளில் பதவிக் காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 340 உள்ளாட்சிகளுக்கும் இம்மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்பதால் மார்ச் 9ம் … Read more

அட்மிஷனை ரத்து செய்துவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்தியரூ.30 கோடி மீட்பு: யுஜிசி தலைவர் பேட்டி

புதுடெல்லி:  பல்கலைகழகங்களில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் ரூ.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானிய குழு தலைவர் தெரிவித்தார். பல்கலைகழக மானிய குழுவின்(யுஜிசி) தலைவர்  ஜெகதீஷ்குமார் நேற்று  கூறுகையில்,‘‘ பல்கலைகழகங்களில் படிக்கும் பல மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். சிறப்பான பல்கலைகழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ஒரு பல்கலைகழகத்தில் சேர்ந்தவர்கள் பின்னர் விரும்பிய படிப்பில் கிடைத்தால் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவார்கள். அவர்கள் செலுத்திய கல்வி … Read more

இம்ரான் கட்சியை தடைசெய்ய சட்ட ஆலோசனை: பாக். உள்துறை அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடைசெய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.  பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ)யின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா பரிசு பொருள் முறைகேடு வழக்கிலும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தொடர்ந்து தப்பி வந்தார். இதற்கிடையே, தோஷகானா வழக்கில்  நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இம்ரான் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் மாவட்ட … Read more

15 ஆண்டு பழமையான தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை

நாக்பூர்: பழைய அரசு வாகனங்களைப் போல, 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களையும் அழிக்க விரைவில் கொள்கை கொண்டு வரப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறி உள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒன்றிய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினி குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க ஒன்றிய அரசு கொள்கையை சமீபத்தில் கொண்டு வந்தது. இதே போல, பழைய தனியார் வாகனங்களை … Read more

ராஜஸ்தானில் மாட்டு சாணத்தில் இருந்து காகிதம்

ஜெய்ப்பூர்:  நாட்டில் மாட்டு சாணம் பொதுவாகவே உரமாக மற்றும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பீம்ராஜ் சர்மா மாட்டு சாணத்தில் இருந்து காகிதம், கவர், ராக்கி கயிறு, ஹோலி மற்றும் தீபாவளி பொருட்கள், பென்சில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். இவரது நிறுவனத்தின் டைரிகள், பெட்டிகள், பென்சில்கள் மற்றும் ராக்கி உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தனது தொழில் குறித்து பேசிய பீம்ராஜ், ‘’இதரப் … Read more

ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தினால் பாஜவுக்கு ஓட்டு போடுவோம்: கேரள பிஷப் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கத்தோலிக்க சபை சார்பில் விவசாயிகள் பேரணி நடந்தது. ரப்பர் உள்பட விவசாய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலச்சேரி பிஷப் ஜோசப் பேசியதாவது: ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.  ஒன்றிய அரசு நினைத்தால் ரப்பர் விலையை ரூ.250 ஆக உயர்த்த முடியும். தேர்தலில் ஓட்டாக மாறாத எந்த … Read more

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாச உள்ளடக்கங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை – அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான மற்றும் அவதூறு உள்ளடக்கங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் நாக்பூரில் பேட்டியளித்த அவர், ஓடிடி தளங்களில் ஆபாசமான உள்ளடக்கம் குறித்து அதிகரிக்கும் புகார்கள் மீது அரசு தீவிரமாக உள்ளதாகவும், தேவைப்பட்டால் விதிமுறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறினார். மேலும், ஓடிடி தளங்களில் படைப்பாற்றலுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிலையில், படைப்பாற்றலின் பெயரால் அவதூறுகளை ஏற்க முடியாது என்றும் அனுராக் தாக்கூர் … Read more

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை… மோசடியால் லட்சக்கணக்கில் இழப்பு – முழு விவரம்!

Credit Card Cyber Crime: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சைபர் மோசடிக்காரர்கள், 50 வயது நபர் ஒருவரிடம் ரூ.7.6 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு பின் நம்பரை உருவாக்க உதவுவதாக கூறி 50 வயது நபரை சைபர் வஞ்சகர்கள் ஏமாற்றினர். இச்சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நடந்தது. இதுதொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 16) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மகாராஷ்டிரா மாநில மின்சார டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) ஊழியராக உள்ளார். அவர் … Read more

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ராகுல்காந்தி கருத்து.. விவரங்களை வழங்க நேரில் வலியுறுத்திய போலீசார்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தது குறித்து, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் முடிவில் ஸ்ரீநகரில் பேசிய ராகுல், பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீசார் ராகுலை சந்தித்து, கூடிய விரைவில் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், முதற்கட்ட அறிக்கையை போலீசாரிடம் ராகுல் வழங்கியதாகவும், 10 … Read more

எங்கெங்கும் வெப்பம்! உச்சத்தை தொடும் மின்சார பயன்பாடு! கடந்த நிதியாண்டுடன் ஓர் ஒப்பீடு!

இந்தியாவில் கடந்த நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் இந்தியாவின் மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டைவிட அதிகரித்த மின் நுகர்வு..  இந்த நிதியாண்டில் ஏப்ரல் – பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 10 சதவீதம் அதிகரித்து 1375.57 பில்லியன் யூனிட்டுகளாக (BU) உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவைவிட, இந்த ஆண்டு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாகவும் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2021 – 22ஆம் ஆண்டு ஏப்ரல் … Read more