குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையிலிருந்து 4 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது இந்த எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார். இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூறுகையில், “ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை … Read more

அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும் அவருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை போட்டு புகழ் பெற்று வருகிறார் பிஷர். அவரது வீடியோக்களை பலரும் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர். … Read more

உ.பி.யில் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் ‘பாஸ்’ ஆவதை தடுக்க ஆன்லைன் வருகைப் பதிவு அமல்

புதுடெல்லி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கைக்கு பின் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சிபெற மாணவர்கள் முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் அன்றாட வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி-யில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அரசு நிதியும் கிடைக்கிறது. இதற்காக அப்பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகிதத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம். இதனால், அரசு அங்கீகாரப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை … Read more

ஒன் சைட் லவ்… பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல்கள்! போலீசாருக்கு டுமிக்கி கொடுத்த பெண் சிக்கியது எப்படி?

Hoax Bomb Threats Woman Arrested: தனது ஒருதலை காதலன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி, 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் … Read more

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: அமைச்சர் ராம் மோகன் நாயுடு

புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த … Read more

260 உயிர்களை பறித்த விமான விபத்து..கண்டுகொள்ளாமல் கூத்தடிக்கும் Air India ஊழியர்கள்! வைரல் வீடியோ..

Watch Video Air India Staffs Dancing Plane Crash: ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சுவடு இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அனைத்து தேர்தல்களும் சட்டப்படியே நடக்கின்றன: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 12 அன்று ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில் குற்றம் சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம், ராகுல் காந்திக்கு இமெயில் மூலம் பதில் கடிதம் … Read more

உயர்கிறது ரயில் டிக்கெட் விலை… எவ்வளவு தெரியுமா? ஜூலை 1 முதல் அமல்!

Train Ticket Price Hike: ரயில்களின் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வே உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு விலை உயர்கிறது என்பதை இங்கு காணலாம்.