ஆந்திராவில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.13 லட்சம் கோடியில் முதலீடு செய்ய ஒப்பந்தம்: 352 நிறுவனங்கள் பங்கேற்பு

திருமலை: ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 352 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆந்திர மாநில அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தொழிலதிபர்களும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் … Read more

பாஜவுக்கு ஆதரவு தந்ததால் மேகாலயா எம்எல்ஏ அலுவலகம் எரிப்பு

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த எச்எஸ்பிடிபி எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அங்கு போட்டியிட்ட பிராந்திய கட்சியான எச்எஸ்பிடிபி  கட்சியானது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் எச்எஸ்பிடிபியை சேர்ந்த எம்எல்ஏக்களான மிதோடியஸ் தாகார், ஷக்லியார் வார்ஜ்ரி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென என்பிபி- பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர். இதனால் … Read more

கர்நாடகா தேர்தல் விறுவிறு; முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்.!

கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருப்பதால், மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடுத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. இத்தகைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடகா சட்டப்பேர்வை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஊழலை … Read more

காய்ச்சல், இருமலை ஏற்படுத்தும் இன்ப்ளூயன்சா பாதிப்பு தீவிரம்: ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிர்க்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்ப்ளூயன்சா ஏ துணை வகை வைரஸ் பரவலால் காய்ச்சல், இருமல் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், மக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2, 3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எச்3என்2 எனும் இன்ப்ளூயன்சா ஏ துணை வகை வைரஸ் பரவல் காரணம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது. இருமலுடன் கூடிய … Read more

லண்டனில் ராகுல் காந்தி பேட்டி; பாஜகவை கிழித்து தொங்கவிட்டார்.!

லண்டன் சென்றுள்ள ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இங்கிலாந்துக்கு ஒரு வார கால பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம் மற்றும் இந்தியா-சீனா உறவுகள் குறித்த விவாதங்களை நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் மாணவர்களிடையே நேற்று பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது எனவும், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்கட்சி … Read more

வரும் 8ம் தேதி ஆஸி. பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறார். வருகின்ற 8ம் தேதி இந்தியா வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா- ஆஸ்திரேலியா உறவை மேம்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மார்ச் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை அரசு முறை பயணமாக … Read more

வதந்தி பரப்பியது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிந்ததால் புலம்பெயர் தொழிலாளர் பற்றிய பதிவை நீக்கினார் பாஜக நிர்வாகி..!!

டெல்லி: வதந்தி பரப்பியது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிந்ததால் புலம்பெயர் தொழிலாளர் பற்றிய பதிவை பாஜக நிர்வாகி நீக்கினார். தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை என உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் வதந்தி பரப்பியிருந்தார். உமாராவ் பதிவிட்ட வதந்தி டிவீட்டை பாஜகவை சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் பீதி ஏற்பட்டது.

பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அதிகாரிகள் குழு சென்னை வருகை..!!

சென்னை: பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அம்மாநில அதிகாரிகள் 2 பேர் சென்னை வந்தனர். பீகார் பாட்டனாவில் இருந்து பாலமுருகன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சென்னை வந்தனர். தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த போராளி..! மக்களுக்காக செய்ததாக சொல்கிறார்

மக்கள் நலன் கருதி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் விற்கப்படும் லாட்டரிச்சீட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இளைஞர் ஒருவர் லாட்டரிச்சீட்டு கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் திருப்புணித்துரா பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற நபர் லாட்டரி சீட்டுக்கள் விற்கும் கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், லாட்டரி வியாபாரிகள் செல்வத்தில் கொழிப்பதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்று முக நூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் . அந்த வீடியோவின் … Read more

காய்ச்சல், சளி, இருமல் தொல்லை: ‘ஆன்டிபயாட்டிக்ஸ்’ மருந்து மாத்திரை வேண்டாம்: இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவுறுத்தல்.!

புதுடெல்லி: மழை, வெப்ப பருவகால மாற்றங்களால் சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது.  இந்த காய்ச்சல் குறித்து ஒன்றிய, மாநில சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஹெச்என்2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் வரை இருக்கும். காய்ச்சல் … Read more