விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம்? – கனிமொழி சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: விமானப் பயணத்தை ரத்து செய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என மாநிலங்களைவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு, “பயணத்தை ரத்து செய்வதற்கான கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்துவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திங்கள்கிழமை காலை … Read more

வடகிழக்கு மாநிலங்களின் ஃபார்முலா கேரளாவில் அமல்; பாஜக புதிய வியூகம்.!

வடகிழக்குக் கிழக்கில் வெற்றி வாகை சூடிய பாஜக, அதேபோல் கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது. இரண்டு முக்கிய இந்து அல்லாத சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், அம்மாநிலத்தின் வெற்றிக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். இவர்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அறுவடை செய்து வருகிறது. பாரம்பரியமாகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் ஒரு மாநிலத்தை … Read more

மகாராஷ்டிரா முதல்வரின் யாத்திரையின் போது பெண் நிர்வாகிக்கு எம்எல்ஏ முத்தம் கொடுத்தாரா?: வீடியோ வைரலால் பரபரப்பு

மும்பை: சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவானது இணையங்களில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆசிர்வாத யாத்திரையின்போது சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரே ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோவில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள், வேனில் நின்றபடி இருபுறம் உள்ள மக்களுக்கு கையசைத்துக் கொண்டே செல்கின்றனர். சிவசேனா கட்சி எம்எல்ஏ … Read more

பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம்’ நிறுத்தம்: ரவிக்குமார் எம்.பி விமர்சனம்

புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)’ கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்ணா பூர்ண தேவி பதில் அளித்தார். விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ‘பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களை விஞ்ஞானிகளாக வளர்த்தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)ஆகும். திறமையான மாணவர்களை … Read more

பிரதமர் மோடியை தீர்த்து கட்ட வேண்டும்; காங்கிரஸ் தலைவர் சர்ச்சை.!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறிய கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளாத பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தியது. கூட்டத்தில் உரையாற்றிய ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா பேசும்போது, “அதானி மற்றும் அம்பானியை அகற்ற வேண்டும் … Read more

ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.. சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி துறைமுகத்தில் வணிகரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தவும், 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள … Read more

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது மணக்கோலத்தில் மணமகனுக்கு திடீர் வலிப்பு: மணமகள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு

ஜான்சி: திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது மணமகனுக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பால், மணமகள் அவருடன் செல்ல மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த லிகோல் கிர்கியில் வசிக்கும் தீபக் சாக்யா என்பவரின் சகோதரி ஆர்த்திக்கும், ஜான்சி அடுத்த பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது. அதன்பின் மணமகளை அவரது கணவர் வீட்டிற்கு … Read more

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வியூகம் எதிர்கட்சி தலைவர்களுடன் மம்தா ஆலோசனை: நாளை டெல்லி பயணம்!

கொல்கத்தா: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் … Read more

தன்பாலின திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதைஎதிர்த்து உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக் களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது. … Read more

அதானி விவகாரம் : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி, நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமத்திற்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம், கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. சண்டிகர், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். … Read more