கர்நாடக தேர்தல் 2023: எடியூரப்பா டபுள் டார்கெட்… மோடி கொடுத்த அசைன்மென்ட்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 என வெற்றி பெற்றன. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காததால் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. பாஜக பிளான் இதுபோன்ற சூழலை 2023 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க பாஜக … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தவித்து வந்தது.  இந்த கொரோனா வைரசுக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.  ஒவ்வொரு நாடுகளிலும் தின்தோறும் ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டது, கோவில்கள் மூடப்பட்டது, திரையரங்குகள், வணிக வளாகங்கள், சந்தை … Read more

ஆளுநரின் செயல் சரியல்ல: டி.ஆர்.பாலு கண்டனம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இது இந்தியர்களை அவமதிக்கவில்லையா..?” – சீனா, தென் கொரியாவில் மோடி பேசியதை நினைவூட்டி கார்கே கேள்வி

புதுடெல்லி: சீனா, தென் கொரியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடியது. அப்போது இரு அவைகளிலும் ஆளும் பாஜக உறுப்பினர்கள், சமீபத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தவறாக பேசிய ராகுல் காந்தி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் … Read more

புதுச்சேரி பட்ஜெட்: LPG மானியம் 300 ரூபாய்! பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

புதுச்சேரி: 2023-24ம் ஆண்டுக்கான யூனியன் பிரதேச பட்ஜெட்டை தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு ரூ.300 மாதாந்திர எல்பிஜி மானியத்தை அறிவித்து, இத்திட்டத்திற்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்தார். அரசு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு துறைகளின் சாதனைகளை விவரித்த ரங்கசாமி, அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அறிவித்தார். புதுச்சேரி முதல்வர் 11,600 கோடி வரியில்லா … Read more

அதானி குழும முறைகேடு தொடர்பாக எந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் பதில்

டெல்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த எந்த குழுவையும் ஒன்றிய அரசு அமைக்கவில்லை என மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தன. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணை ஆணையத்தை … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் தொடர்பு என்ன? – அமலாக்கத் துறை விளக்கம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்திருக்கிறது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் … Read more

ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR, The Elephant Whisperers படக்குழுவினருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி: ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR, The Elephant Whisperers படக்குழுவினருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னை இயற்கை மற்றும் அதன் அனைத்து குழந்தைகளுடனான நமது பிணைப்புகளைப் பற்றிய நமது பார்ப்பனர்களின் காலமற்ற செய்திக்கு இது உலகை எழுப்பும் என்று நம்புகிறேன். ‘நாட்டு நாடு’, உலகளாவிய நிகழ்வு, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது என்று குடியரசு தலைவர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடச்சீ இப்படியும் செய்வாங்களா..!! மறுவாழ்வு மையத்தில் நேர்ந்த கொடூரம்!!

குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் ஜியோனா போதை மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இங்கு மேசானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதார் (25) என்பவர் 6 மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த மாதம் 17-ம் தேதி திடீரென உயிரிழந்த நிலையில், சிகிச்சை மையத்தின் நிர்வாகிகள் அவர் இயற்கையான முறையில் உயிரிழந்துவிட்டதாகக் கூறி உடலை ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது. இருப்பினும் ஹர்திக் மரணம் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவர்கள் சிசிடிவி … Read more

மோடியை பார்க்க வந்த சிறுவனை சட்டையை கழட்ட வைத்த காவலர்கள்..!!

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் பயணிப்பது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இன்று 6ஆவது முறையாக கர்நாடகா வந்த பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, தார்வாடில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மைசூரு-குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். … Read more