இனி ஆன்லைன் கேமிங்-ல் வெற்றிபெற்ற பணத்திற்கு 30% வரி..!!

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி … Read more

கலாஷேத்ரா விவகாரம் – உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!!

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை கலாக்ஷேத்ரா நடன பள்ளிக்கு விடுமுறை … Read more

ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது … Read more

போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

போபால் – டெல்லி இடையேயான 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார். 708 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பிரதமர் … Read more

கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி சோதனை கெடு 18 மாதம் நீட்டிப்பு

புதுடெல்லி:  கனரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையங்களில் (ஏடிஎஸ்) கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் 2024 ஜூன் 1ம் தேதி முதல் கட்டாய தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனும் உத்தரவிடப்பட்டிருந்தது. கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி பரிசோதனை செய்யும் திட்டம் … Read more

மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம்: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது. சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகித மாற்றம் குறித்த தகவலை அளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை, “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய … Read more

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முக்கிய கூட்டு நாடுகளாக அறிவித்தது ரஷ்யா

ரஷ்யாவின் வெளிநாட்டு கொள்கையின் படி இந்தியாவும் சீனாவும் முக்கியமான கூட்டு நாடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியான 42 பக்கம் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பின்னரும் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுடன் ராணுவ ரீதியாகவும் அரசு முறையாகவும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன. அரசியலின் 5 பெரும் தூண்களாகக் கருதப்படும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் உறவுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பு நல்கி வருகின. … Read more

சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 24ம் தேதி  சிசோடியா ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு … Read more

இன்று முதல் அதிகரிக்கும் குறையும் பொருட்கள்.. முழு லிஸ்ட் ஒர் பார்வை..!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி திருத்தம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் ஏப்ரல் 1 முதல் விலை உயர்ந்தாலும், சில பொருட்களின் விலை மலிவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று முதல் மலிவாகவும், விலை உயர்வு பெறும் பொருட்களைப் பற்றி இனி காண்போம். விலை உயரப்போகும் பொருட்கள் தங்க நகைகள் சிகரெட் வெள்ளி பாத்திரங்கள் பிளாட்டினம் கிட்சனில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சிம்னி வைட்டமின்கள் உயர் … Read more

உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் : மக்கள் முகக்கவசம் அணிய மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவிட் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய உருமாறிய கோவிட் XBB.1.16 மிதமான பாதிப்பையே கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென குர்கானில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார். பரிசோதனைகள் அதிகரித்துள்ளதால் பாதிப்புகளும் அதிகளவில் தெரிய வருவதாகக் கூறிய அவர், பாதிப்புகள் தீவிரம் குறைந்தவையாக காணப்படுவதாகக் குறிப்பிட்டார். … Read more