ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு உட்பட 20 இடத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: நிலக்கரி வரி விதிப்பு வழக்கில் அதிரடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் எம்எல்ஏவின் வீடு உட்பட 20 இடங்களில் நிலக்கரி வரி விதிப்பு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிலக்கரி வரி விதிப்பு விவகாரத்தில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் முன்னாள்  துணைச் செயலாளர் சவுமியா சவுராசியா உட்பட 8 பேர் மீது அமலாக்கத்துறை  பணமோசடி வழக்கு பதிவு செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டம்  தொடர்பான வழக்கை (பிஎம்எல்ஏ) விசாரிக்கும் ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த  ஜனவரி 30ம் … Read more

சிபிஐ விசாரணைக்கு வராத டெல்லி துணை முதல்வர்

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பர் 17-ம் தேதி கேஜ்ரிவால் அரசு, புதிய மதுபான கொள்கையை அமல் செய்தது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் குற்றம் சாட்டப்பட் டுள்ளன டெல்லி துணை முதல்வர் … Read more

கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டர்: காதலர் தினத்தில் ஆசை வார்த்தை கூறி மடக்கிய பரிதாபம்

பரேலி: கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள வேண்டி, மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த டாக்டரான பரூக் ஆலம் என்பவர், கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று மனைவி நஸ்ரீனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, ‘எனக்கும் உனக்கும் இடையிலான காதலை நிரூபிக்க நீ எனக்கு என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த நஸ்ரீனி, ‘உங்களுக்காக எனது உயிரையும் … Read more

நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்களுக்கு மது வழங்குவதை தடுக்க 100 சோதனை சாவடி அமைத்து பெண்கள் கண்காணிப்பு

கோஹிமா: கடந்த 1989-ம் ஆண்டில் நாகாலாந்தில் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு மது கடத்தி வருவது அதிகரித்தது. இந்த சூழலில் அந்த மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்க கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. இதை தடுக்க நாகாலாந்து பெண்கள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். Source link

இந்தியா-பாக். எல்லையான குஜராத் ஹராமி நல்லாவில் புதைசேற்றிலும் ரோந்துப்பணி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான, குஜராத்தில் உள்ள ஹராமி நல்லாவில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், புதைச் சேற்றில் சிக்காமல் இருக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவருக்கொருவர் கயிறு கட்டி ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..  குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியான கட்சு மாவட்டம் சர் க்ரிக் நீர்நிலைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 1968-ல் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் இந்தியா தனது … Read more

திருப்பதி கோயில் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றும் வழக்கம்போல் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கோயில் அருகே உள்ள வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை எதிரே உள்ள பொதுக்கழிவறையில் இருந்து திடீரென தீப்பற்றிய நிலையில் நேற்றிரவு பெண் ஒருவர் அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு … Read more

JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்

டெல்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி யினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர். மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் சென்றவர்கள், `ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை … Read more

சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்துள்ளது: சஞ்சய் ராவத் புகாருக்கு ஷிண்டே தரப்பு மறுப்பு

மும்பை: சிவசேனா கட்சிப் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். இதை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். இதனால் … Read more

135 பேர் பலியான மோர்பி பாலம் சம்பவம்: 49 கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்திருந்தது.! குஜராத் எஸ்ஐடி அறிக்கையில் பகீர்

மோர்பி: குஜராத் மோர்பி பாலத்தின் 49 இணைப்பு கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்ததாக அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி பாலம் கடந்தாண்டு அக்.30ம் தேதி அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்து வந்த அஜந்தா உற்பத்தி லிமிடெட் (ஓரேவா குழுமம்) நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால் … Read more

”எல்லாவற்றையும் செய்துவிட்டு திசைதிருப்புகிறது ABVP அமைப்பு”-காயமடைந்த தமிழக மாணவர் பேட்டி

”டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினரே காரணம்” என தாக்குதலுக்குள்ளான மாணவர் நாசர் தெரிவித்துள்ளார். டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 19), `ஐஐடி வளாகங்களில் பட்டியலின, இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் மற்றும் … Read more