”இ-சஞ்சீவினி செயலியால் 10 கோடி பேர் பலன்..” – பிரதமர் மோடி..!

பணப் பரிமாற்றத்திற்கான இந்தியாவின் UPI மற்றும் இணையம் மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி செயலி ஆகியவை டிஜிட்டல் இந்தியாவின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று மனதின் குரல்  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 98வது பதிப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநவ் இணைப்பால் உலகின் பல நாடுகள் யூபிஐயை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார். மேலும், கரோனா காலத்தில் துவங்கப்பட்ட இ-சஞ்சீவி … Read more

உ.பி முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த காவலர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு  பாய்ந்து காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநில போலீஸ் ஏட்டு சந்தீப் யாதவ் என்பவர், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுப்பில் சென்ற சந்தீப், தனது வீட்டில் இருந்தபோது தனது கைத்துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் அவருடைய கைத்துப்பாக்கி வெடித்தது. இதனால் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ … Read more

இந்தியாவின் UPI உலக நாடுகளை ஈர்க்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI உலக நாடுகளை ஈர்த்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தும் மான் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. பிரதமரின் இந்த 98வது மான் கி பாத் உரையை, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தவாறு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கேட்டனர். இந்த வானொலி உரையில் … Read more

ஹைதராபாத்தில் தனது நண்பனின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன்..!

ஹைதராபாத்தில் தனது காதலிக்கு முன்னாள் காதலனான தனது நண்பன் குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், அவரை நண்பனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா ஆகியோர் கல்லூரியில் ஒன்றாக படித்ததாகவும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. நவீன் முதலில் காதலை தெரிவித்து மாணவியுடன் பழகி வந்தநிலையில், ஓரிரு ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியுடன் ஹரிஹர கிருஷ்ணா பழகி வந்துள்ளார். அப்போது முன்னாள் … Read more

மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

மைசூர்: மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கிருஷ்ணராஜபுரம் – பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அந்த ரயில்  மீது கற்கள் வீசினர். இதனால் ரயிலின் 2 ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் பயணிகள் யாரும் … Read more

பாடூர் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வளர்ப்பு யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு: 7 பேர் காயம்

பாலக்காடு:  பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே பாடூர் பகவதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஊர்வலத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற வளர்ப்பு யானையை விழா கமிட்டியினர் வரவழைத்து இருந்தனர். யானை மீது அம்மன் ஊர்வலம் முடிந்தநிலையில், யானையை தோட்டத்தில் கட்டுவதற்காக, பாகன் கொண்டு சென்றார். அப்போது, யானையின் பின்னால் வந்த மற்றொரு யானை ஒன்று முட்டியதால் தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற யானை மிரண்டோடியது.   இதனால், மக்கள் சிதறியடித்து ஓடியதில் யானையின் பாகன் நெம்மாராவைச் … Read more

Video: காண்டான காண்டாமிருகங்கள்… சண்டையை போட்டோ எடுத்த பயணிகளை ஓடவிட்ட சம்பவம்!

One Horn Rhinos Attack Viral Video: மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவில், ஏழு சுற்றுலாப் பயணிகள் சாஃபாரிக்கு சென்ற வாகனம் மீது இரண்டு காண்டாமிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஃபாரி அனுபவத்தை  அனுபவிக்க உற்சாகமாக இருந்த ஏழு சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அந்த பூங்காவில், புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை பார்த்தே ஆக வேண்டும் என விருப்பத்துடனும் இருந்தனர். அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை ஒட்டியிருந்த புதர்களின் விலங்குகளின் நடமாட்டத்தை … Read more

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்; ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பேத்கருக்கு நோபல் பரிசு – பசவராஜ் பொம்மை கோரிக்கை

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரின் பொருளாதார முனைவர் பட்ட ஆய்வேடான‌ ‘ரூபாயின் சிக்கல்’ வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெங்களூருவில் அவரது பொருளாதார சிந்தனைகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் கடைசி மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி கிடைக்க வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கர் பாடுபட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வடித்த அவர், முதல் சட்ட அமைச்சராகவும் திறம்பட … Read more

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: தீவிர பாதுகாப்பில் ராணுவம்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர். … Read more