நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனு மீது வரும் 27-ம் தேதி விசாரணை

டெல்லி: நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரும் மனுவை வரும் 27-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு விவரங்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காதலனை கரம் பிடிக்க இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் சிறுமி.. பெற்றோரிடம் ஒப்படைத்த இந்திய அதிகாரிகள்!

காதலனை கரம் பிடிக்க, இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டு சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இக்ரா ஜீவனி என்ற 16 வயது சிறுமிக்கு, ஆன்லைன் கேம்ஸ் மூலம் உத்தர பிரதேச இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இளைஞரை மணக்க தீர்மானித்த இக்ரா, இந்திய விசா கிடைக்காததால், நகைகளை விற்று, விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து நேபாளம் வந்துள்ளார். இக்ராவின் இந்திய காதலனும் நேபாளம் சென்று, அவரை மணமுடித்து, பின் இருவரும் எல்லை வழியாக இந்தியா வந்துள்ளனர். … Read more

கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவிப்பு

மும்பை: கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்திய பாஸ்போர்ட் பெற அக்ஷய் குமார் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் சில வருடங்களுக்கு முன்பு கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார்.  கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவர் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பதுதான் என அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தனியார் ஊடகத்திற்கு அக்ஷய் … Read more

"நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

“பாதுகாப்பான, நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது” என ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர்  நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசுகையில், இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், “மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய நிதி மற்றும் … Read more

பாகிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்ப வேண்டும்: ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி: கோதுமை பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 20 லட்சம் டன் முதல் 25 லட்சம் டன் வரையிலான கோதுமையை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ”பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் கொடுமையானது. பாகிஸ்தானுக்கு இந்தியா 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மோடு … Read more

சர்ச்சைக்குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆந்திர ஆளுநராக பதவி ஏற்பு.!

அயோத்தி – பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு, தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சையது அப்துல் நசீர். சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி இவர் ஆவார். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி 2017ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். முத்தலாக் சர்ச்சையில் தீர்ப்பு … Read more

சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

கொல்கத்தா: முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக தங்களது அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையால்  சிறைவாசிகளுக்கு, குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் (Heavy duty Laundry machine) வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.   தென்னாப்பிரிக்காவில் 1913 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சத்தியாகிரகத்தின் போது … Read more

அதானி குழுமத்தில் முதலீடு… சரிவைச் சந்தித்த எல்.ஐ.சி.! என்ன நடந்தது?

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் ஆட்டம் கண்டு வருகிறது என்பது உலகறிந்த விஷயம். இந்த நிலையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழுமம் மோசடி செய்திருப்பதாக, ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அக்குழும பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன … Read more

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமே முக்கிய காரணம்” – ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே ஆதாரமாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப். 24) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ பதக் … Read more

வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல்: மோகன்லால் வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை வாபஸ் பெறக்கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து 6 மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கொச்சியிலுள்ள வீட்டிலிருந்து … Read more