இரட்டை கொலை:பசு காவலர்களால் 20 மணிநேரம்.. 200 கி.மீ.தூரம் இஸ்லாமிய இளைஞர்கள் அலைக்கழிப்பு?

அரியானாவில் பசு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் காரில் வைத்து எரித்து இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் காட்மிக்கா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான நசீர் (27) மற்றும் ஜுனைத் (35) ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி காணாமல் போனநிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் லோஹரு கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதில் … Read more

அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஊடகங்களுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது எனவும், எங்கள் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தபோது தலைமை நீதிபதி அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஊடகங்களுக்கு எதிராக நாங்கள் எந்த … Read more

கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.

அதானி குழுமம் – ஹிண்டன்பெர்க் விவகாரம்: ஊடகங்களுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதானி குழுமம் – ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எம்.எல். சர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், மாண்பையும் விமர்சிக்க கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஊடகங்களுக்கு … Read more

சுகேஷ் சந்திரசேகர் சிறை அறையில் ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி: மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அறையிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரது அறையில் சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு … Read more

மார்ச் 1-ம் தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்..!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மார்ச் 1-ம் தேதி இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28-ம் தேதியிலிருந்து அரசு முறை பயணமாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு செல்லும் அவர் அதனைத் தொடர்ந்து இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது பலதரப்புவாதத்தை வலுப்படுத்துவது, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, போதைப்பொருள் எதிர்ப்பு, உலகளாவிய சுகாதாரம், மனிதாபிமான உதவி, பேரழிவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என … Read more

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார் அப்துல் நசீர்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் அப்துல் நசீருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு ரோஹினி சிந்தூரி மானநஷ்ட வழக்கு – மார்ச் 7-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ், தனது தனிப்பட்டபுகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். சசிகலா மீது சிறை முறைகேடு புகாரை தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா, க‌ர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது … Read more

2 நாட்கள் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு: 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் சர்வதேச வரிவிதிப்பு, உலகளாவிய பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதற்கு சில மணித்துளிகள் முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத் பாஜகவில் இணைந்தார். இதனால் டெல்லி மாநகராட்சியில் இன்று புதிதாக மற்றுமொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (பிப்.24), டெல்லி மாநகராட்சியின் மாமன்றத்தில் புதிய மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் … Read more