குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

President Donald Trump India Visit: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இந்தியா வருகை தர உள்ளார். இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். 

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர்

திரு​மலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்டும்படி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பிஆர் நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச … Read more

திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

திருப்​பதி: ஆந்​தி​ரா​வில் மாம்பழ விவ​சா​யிகள் கடந்த ஆண்டை போன்​று, இந்த ஆண்​டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஒரு கிலோ மாங்​காய் குறைந்​த​பட்​சம் ரூ.12க்கு விவ​சா​யிட​மிருந்து பெற வேண்​டுமென​வும், இதில் ரூ. 4 அரசு மானி​யம் வழங்​கும் எனவும் அறி​வித்​துள்​ளார். இதனை மாம்பழ விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யுடன் வரவேற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், நேற்று திருப்​ப​தி​யில் மாவட்ட ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “திருப்​பதி மாவட்​டத்​தில் மட்​டும் இந்த ஆண்டு மொத்​தம் 14,582 ஹெக்​டேர் … Read more

பெண்களுக்கு அறிய வாய்ப்பு! வட்டியே இல்லாமல் 3 லட்சம் கடன்! எப்படி விண்ணப்பிப்பது?

Udyogini Yojana Scheme: பெண்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றான உத்யோகினி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

பாகிஸ்தான் ராணுவ தளபதியை புகழ்ந்த காங். மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அகம​தா​பாத் சிவில் மருத்​து​வ​மனை​யின் கூடு​தல் மருத்​துவ கண்​காணிப்​பாளர் டாக்​டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார். … Read more

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் செல்போன் பாதுகாக்க திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். … Read more

சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன. இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, … Read more

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட … Read more

ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவதால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள மற்ற குடியிருப்பாளர்களும் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு … Read more