மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ரூ.4,276 கோடியில் ஆயுதங்கள் வாங்க முடிவு!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா என்ற டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்மோஸ் ஏவுகணைச் செலுத்த … Read more

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு..!!

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து பல நாட்களாக 82-க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 81.75-ஆக உள்ளது. 2 நாட்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் உயர்ந்ததால் மாற்று மதிப்பு 82-க்கு கீழ் சென்றது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மூலதனம் வரத் தொடங்கியதால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

கைக்குழந்தையோடு சண்டையில் ஈடுபட்ட தாய்- 18 மாத குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு!

பீகார் ஜெகனாபாத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது 18 மாத கைக்குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே இரண்டு தரப்பினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் அங்கிருந்த பெண் ஒருவர் 18 மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே சண்டையில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு வாக்குவாதத்தில் இருந்து கைகலப்பு வரை முற்றிய நிலையில், கைக்குழந்தை கீழே தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த குழந்தை … Read more

போலி வேலைவாய்ப்பு விளம்பரம்…ரயில்வே எச்சரிக்கை!…

ரயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்து ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப்படையோ அல்லது ரயில்வே அமைச்சகமோ தங்களது அதிகாரப்பூர்வ … Read more

சென்னையில் ரகசியமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய உ.பி. அரசு – ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி / சென்னை: உத்தரப் பிரதேச அரசு சார்பாக சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) உதவியுடன் உ.பி. அரசு இந்த மாநாட்டை நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் 500 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது, அது குறித்து அம்மாநில ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது வழக்கம். ஆனால், உ.பி. அரசால் நடத்தப்பட்ட இந்த … Read more

விரைவில் Wistron iPhone தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது டாடா குழுமம்!

புதுடெல்லி: டாடா குழுமம் தென்னிந்தியாவில் ஐபோன் அசெம்பிளி ஆலையை கையகப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறுவதற்கான நாட்டின் லட்சியங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குழுமத்தின் மென்பொருள் சேவை பிரிவின் உயர் அதிகாரி கூறினார். டாடா குழுமம் தைவானின் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் இந்த செயல்முறையை நன்கு அறிந்த இரண்டு நபர்கள் இது குறித்து கூறுகையில், மார்ச் இறுதிக்குள் டாடா குழுமம் ஒப்பந்தத்தை முடிக்க விரும்புகிறது. இரு … Read more

பெங்களூர் அருகில் உள்ள ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை வாங்குகிறது டாட்டா குழுமம்!

பெங்களூர் அருகே உள்ள தைவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 128 பில்லியன் டாலர் மதிப்புடைய டாட்டா குழுமம் ஐ போன் உற்பத்தி செய்ய தைவான் விஸ்ட்ரன் கார்ப்பரேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 31 ம் தேதியுடன் நிறைவு பெற்று ஏப்ரல் முதல் டாட்டா நிறுவனம் உற்பத்தியை தொடங்க உள்ளது. பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலை … Read more

பெங்களூருவில் பரிதாபம் மெட்ரோ ரயில் தூண் சாய்ந்து தாய்-மகன் பலி: தந்தை, மகள் படுகாயம்

பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் சாய்ந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய்- மகன் பலியானார்கள். பைக் ஓட்டிய தந்தையும், மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரு எச்.பி.ஆர். லே அவுட் அருகில் நாகவார பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக என்சிசி நிறுவனம் அமைத்திருந்த 40 அடி உயர இரும்பு கம்பி தூண் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சாலையில் சாய்ந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக … Read more

நிலத்தகராறு ஒன்றரை வயது குழந்தை கொலை!….3 பேர் கைது

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நிலத் தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பெண் ஒருவர், தனது ஒன்றரை வயது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சண்டையின்போது, குழந்தை தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் எதிர்தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதால் குழந்தை உயிரிழந்ததாக அவரது … Read more

மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம்…உச்சநீதிமன்றம் கருத்து!….

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆ.ர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையின் போது இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து. … Read more