''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் … Read more

உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே முற்றும் போர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு..!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 9.078 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 505.519 பில்லியன் டாலர்களாகவும், தங்கம் கையிருப்பு 1.106 டாலர்கள் அதிகரித்து 42.890 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜம்முவில் நள்ளிரவு வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயம்: 24 மணி நேரத்தில் 3 சம்பவம் நடந்ததால் பதற்றம்

ஜம்மு: ஜம்முவில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயமடைந்தார். 24 மணி நேர இடைவெளியில் 3 வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நர்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் நேற்று காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நடந்தது. … Read more

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது

புதுடெல்லி: டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டலில் முகமது ஷெரீப் என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகவும் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஃபலா பின் சயத் அல் நஹ்யானின் அலுவலக ஊழியர் என்றும் கூறியுள்ளார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய … Read more

Old Mysore Region: வெற்றியை தீர்மானிக்கும் கர்நாடக தமிழர்களின் வாக்கு வங்கி!

நடப்பாண்டை பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஏனெனில் வரிசையாக 9 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் வடகிழக்கில் மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டது. இதையடுத்து தெற்கில் முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக மாநில தேர்தல் வரவுள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. கடந்த 2018 தேர்தலை அடித்து ஆட்சி கவிழ்ப்பால் பாஜக ஆளுங்கட்சியாக நாற்காலியில் அமர்ந்தது. இம்முறை நேரடியாகவே ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. … Read more

யோகா வகுப்பு எடுப்பதாக கூறி குர்தாவை தூக்கி வயிற்றை காட்டிய ம.பி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செஹோர்: யோகா வகுப்பு எடுப்பதாக கூறி தனது குர்தாவை தூக்கி வயிற்றைக் காட்டி செய்து செய்து காட்டிய மத்திய பிரதேச முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், செஹோர் மாவட்டம் நஸ்லுல்லாகஞ்சில் நடந்த யோகா பயிற்சி மையத்திற்கு சென்றார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, திடீரென மேடையில் அமர்ந்தவாறு ேயாகா குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர், மூச்சுப் பயிற்சி மற்றும்  பிராணாயாமத்தின் … Read more

மனைவியை பழிவாங்க இப்படியா செய்வது? பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட கணவர்.. பீகாரில் பயங்கரம்!

கணவர் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால், விரக்தியடைந்த கணவன் கோபத்தில் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டுள்ள சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுரா மாவட்டத்தில் முரளிகஞ்ச் அருகே நயா நகர் காவ்ன் கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா பசுகி என்ற 25 வயது வாலிபர் பஞ்சாபில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகர சங்கராந்தி பண்டிகையொட்டி நயா நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்று … Read more

அயோத்தியில் நடக்க இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அவசர கூட்டம் ரத்து

அயோத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த, கூட்டமைப்பின் அவசர பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமரையும் இடைநீக்கம் செய்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடக்கும் தர நிர்ணயத்திற்கான போட்டி உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், … Read more

மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீட்டில் இருந்து பெண் விரட்டியடிப்பு: ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண் அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் விரட்டியடிக்கப்படும் வீடியோ வைரலாகி வருவதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மம்தா பூபேஷ் என்பவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவரால் கட்டாயப்படுத்தி விரட்டி வெளியேற்றப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது. இந்த வீடியோவை ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். … Read more