புதிய கொரோனா: 4ஆவது டோஸ் தடுப்பூசி போடணுமா?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அரசாங்கங்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை தங்களது நாட்டு மக்களுக்கு வழங்கின. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.08 கோடி தடுப்பூசி டோஸ்கள் … Read more

கேரளாவில் சுமார் 56 இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கேரளாவில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். எர்ணாகுளம், கோழிக்கோடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, மலப்புரம், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 56 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. Source link

பாதுகாப்பு விதிகளை ராகுல் மீறினார்!: மத்திய ரிசர்வ் படை விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் 100 நாள்களை கடந்து நடைபெற்று வருகின்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடைபயணம் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லிக்குள் நுழைந்தது. அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தவறிவிட்டதாகவும்,  ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உள்ள நிலையில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் கட்சி, … Read more

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ்? குஜராத் அரசு தகவல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த ஜூன் மாதம் தனது 99-வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி | கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு … Read more

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் – அமைச்சர் ரோஜா

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்றும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

குவியும் சுற்றுலா பயணிகள்… புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோலகலாமாக தயாராகும் புதுச்சேரி!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது புதுச்சேரி. சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. ஆனால் கொரோனா தாக்கத்தால் 2020, 2021 புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் ஏதும் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு 2021-ல் ஓரளவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா அச்சம் … Read more

பள்ளி சென்று கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை..!!

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வந்த ஜெய்ராம் நாயக் (20) என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியுடன் ஜெய்ராம் நாயக்குக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதற்கிடையே அந்த கிராமத்தை விட்டு ஜெய்ராம் நாயக் … Read more

மைசூருவில் தேவாலயம் மீது தாக்குதல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவின் மைசூருவில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்டணாவில் தூய மரியன்னை தேவாலயம் உள்ளது. திங்கள்கிழமை இரவு தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோரின் சிலைகளை தாக்கி சேதப்படுத்தினர். மேலும் தேவாலயத்தில் இருந்த பொருட்களை கீழே போட்டு உடைத்த‌னர். அங்கிருந்த 4 உண்டியல்களையும் உடைக்க முயற்சித்துள்ள‌னர். அப்போது தேவாலயத்தின் காவலர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் … Read more