தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தொழிலதிபர் அதானி மறுப்பு

டெல்லி: தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தொழிலதிபர் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தனி நபரும் காரணமில்லை. 30 ஆண்டுகளில் பல தலைவர்கள், பல அரசுகள் செய்த சீர்திருத்தங்கள் எனது தொழில் வளர்ச்சிக்கு உதவின என்று அதானி விளக்கம் அளித்துள்ளார்.

3 கோடி பயணிகளின் தகவல்கள் திருட்டு? – என்ன சொல்கிறது இந்திய ரயில்வே?

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவலை இந்திய ரயில்வே திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் 90 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்ததைப் போன்று, தற்போது இந்திய ரயில்வே இணையதளத்திலிருந்து மீண்டும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாக உள்ளதாகவும், இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை ‘ஷேடோஹேக்கர்கஸ்’ … Read more

எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும்… ராகுல் காந்தி சொன்ன சுவாரஸ்ய பதில்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவர் மனம் திறந்து திருமணம் பற்றி பேசியுள்ளார். இந்திரா காந்தி போன்ற குணநலன் கொண்ட பெண்ணை வாழ்க்கை துணையாக ஏற்பீர்களா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எனது அன்னையை மிகவும் பிடிக்கும். என் பாட்டி … Read more

இந்த இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி… அதிர்ந்த உஸ்பெகிஸ்தான்… சிக்கும் இந்திய நிறுவனம்!

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்தால் பலி இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை … Read more

புதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள 55 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அரசு குற்றச்சாட்டு

இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நுரையீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட டாக் ஒன் மேக்ஸ் என்ற இருமல் மருந்தை கொடுத்ததாகவும் இதில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மூன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு தடவை 2.5 எம்எல் என்ற … Read more

அதிர்ச்சி! 40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும்!!

இந்தியாவில் ஜனவரி மாதத்தின் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது எனவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கமடைந்து வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் மத்திய, மாநில … Read more

அலர்ட்! ஒருவரிடமிருந்து 16 பேருக்கு பரவும் கொரோனா!!

உலகம் முழுவதும் ‘பி.எஃப்.7’ என்ற கொரோனா வைரஸ் திரிபு புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் புது வகை கொரோனா தொடர்பான அச்சம் மேலோங்கி இருப்பதால் மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி | கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு … Read more

ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம்; அவரது கணவர் கைது..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு அவரது கணவர் பிரகாஷ்குமார் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடிகை ரியா குமாரியை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக கணவர் தகவல் தெரிவித்திருந்தார். ரியா குமாரி கணவர் பிரகாஷ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி ரியா குமாரியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பிரகாஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.