தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் 12 கடல் மைல் தாண்டி சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுடெல்லி: ‘சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீனவர்கள் பயன்படுத்தலாம்’ என்று இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என உத்தரவிட்டுள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை … Read more

திடீரென மளமளவென சரிந்த அடுக்குமாடி கட்டடம்; தொடரும் உயிரிழப்புகள்! என்ன நடந்தது லக்னோவில்?

லக்னோவில் நேற்று நிலநடுக்கம் பதிவான நிலையில், அது ஏற்பட்டு அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் சுமார் 11 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர் என லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று (ஜன. 24) நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 … Read more

பிரதமர் மோடியின் ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வம்

சென்னை: தேர்வு குறித்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கும் `தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்மிகப்பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை … Read more

வாலிபால் அணியை வாங்கிய விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: வாலிபால் அணியை வாங்கியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு, டாக்ஸிவாலா, டியர் காம்ரேட், லைகர், நோட்டா உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு இளம் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் தற்போதைக்கு தனது பார்வையை விளையாட்டு பக்கம் அவர் திருப்பியுள்ளார். பிரைம் வாலிபால் லீக் என்ற அமைப்பு வாலிபால் ஆட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதில் ஐதராபாத் அணியை அபிஷேக் ரெட்டி கன்கலா என்பவருடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா … Read more

மக்களே உஷார்..!! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்… 19 மாணவர்களுக்கு பாதிப்பு..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டில் படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பள்ளியில் நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறி காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இதில் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று … Read more

திடீரென விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட 2 பயணிகள்..! ஏன் தெரியுமா ?

டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு நேற்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பயணி ஒருவர் விமானத்தின் பெண் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான … Read more

சுகேஷ் சந்திரசேகரின் கருப்பு பணத்தை சட்டப்பூர்வ வெள்ளை பணமாக்க மனைவி உதவி

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை: சுகேஷ் சந்திரசேகர் மோசடியான வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை குவித்துள்ளார். அதில், பெரும்பாலானவை கணக்கில் காட்டப்படாதவை. சிறு வணிக நிறுவனங்கள் மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி முறையான வருமானமாக சுகேஷ் தம்பதி மாற்றிக் காட்டியுள்ளனர். நெட்பிளிக்ஸில் வெளியான ஓஸார்க் தொடரின் கதைக் கருவும் கருப்பு பணத்தை வெள்ளையாக எப்படி மாற்றுவது என்பதே. அதில் வரும் காட்சிகளை அடிப்படையாக … Read more

இந்தியா வந்தார் எகிப்து அதிபர்

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க  எகிப்து அதிபர் சிசி நேற்று இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர் குடியரசு தின விழா மட்டுமல்லாமல் விவசாயம், வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இருநாடுகள் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் 5 அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வந்துள்ளனர்.

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டன

காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. … Read more

சீனா படைகளை குவிக்கும் நிலையில் இந்திய கடற்படை மாபெரும் போர் ஒத்திகை

புதுடெல்லி:  இந்திய கடற்படையின் போருக்கான தயார்நிலை குறித்த `ட்ராபெக்ஸ்’ எனப்படும் போர் ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போர் ஒத்திகை இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியது. இதன்போது, ஏவுகணை போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், சிறிய போர் கப்பல்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகை போர் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த போர் ஒத்திகையானது, போருக்கான இந்திய கடற்படையின் தயார் … Read more