புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர்களை விட்டு இந்தியாவிற்குள்  வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்காக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல் விளக்கம் தருகிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் அரசியல் காட்சிகள் கருத்துக்களை அனுப்பவும் தேர்தல் … Read more

உடல் முழுக்க அடர் முடியுடன் பிறந்த குழந்தை: ஷாக்கான டாக்டர்ஸ்: எதனால் தெரியுமா?

இரட்டை தலை, நான்கு கால்கள் என பல வகைகளில் குழந்தைகள் பிறப்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் கருமை படர்ந்த நிலையில் உடலில் 60 சதவிகிதம் முடியுடன் ஒரு குழந்தை உத்தர பிரதேசத்தில் பிறந்திருக்கிறது. அதன்படி உத்தர பிரதேசத்தின் ஹர்டோய் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த செவ்வாயன்று (டிச.,27) பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அதே பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு பிறந்த குழந்தையை கண்டதும் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். … Read more

‘கால்பந்து கடவுள்’ பீலேவுக்கு சிலை வைத்த பெங்களூரு தமிழர்கள்: மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்

பெங்களூரு: கால்பந்து கடவுள் என அழைக்கப்படும் பீலேவுக்கு இந்தியாவிலே முதல் முறையாக பெங்களூருவில் தமிழர்கள் சிலை வைத்து கவுரவித்துள்ளனர். அவரது மறைவை தொடர்ந்து பீலேவின் சிலைக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெங்களூருவில் உள்ள அல்சூர் அருகே கவுதமபுரம் உள்ளது. இந்த நகரின் பழைய பெயர் ‘கன் ட்ரூப்’ (Gun Troop). இங்கு மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் ராணுவத்தின் 515வது துப்பாக்கி தொழிற்சாலை அமைந்திருந்ததால் இந்த பகுதி ‘கன் ட்ரூப்’ என அழைக்கப்பட்டது. இங்கு நூறாண்டுகளுக்கும் … Read more

மராட்டிய நடிகை தற்கொலை வழக்கு; காதலனுக்கு சிறையில் சலுகைகள்.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு … Read more

இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது – அமித்ஷா

இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், இந்தியா-சீனா எல்லைக்குறித்து தான் கவலைப்படவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது என தெரிவித்தார். இந்தோ-திபெத் எல்லை போலீசாருக்கு மக்கள் ஹிம்வீர் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாகவும், இது பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைவிட பெரியது என்று தான் நினைப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.   … Read more

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை

கேரளா: சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவெலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைகிறது.

மகரவிளக்கு பூஜை: நடை திறந்த நாள் முதல் சபரிமலையில் குவியும் பக்தர்கள்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து அன்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக் காலத்தில் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகர … Read more

11 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி: சோதனை செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!

கர்நாடகாவின் மைசூரு நகரில் 11 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வயிறு வலிக்கிறது என கூறி வந்துள்ள நிலையில், பெற்றோர் ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்று காண்பித்துள்ளனர். ஆனால், பல்வேறு மருத்துவம் பார்த்தும் வலி குறையவில்லை. கடந்த 8 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. வலிக்கான காரணம் என்னவென கண்டறிய முடியவில்லை. இதனால், பள்ளி படிப்பையும் இடையிலேயே சிறுமி நிறுத்தி விட்டார். இதனை தொடர்ந்து, இரைப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்றபோது, அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி … Read more

பாஜக, ஆர்.எஸ்.எஸ். தான் எனது குரு….! ராகுல் காந்தி அதிரடி கருத்து!…

எதை செய்யக்கூடாது என்று எனக்கு கற்று கொடுத்த பா.ஜ.க தனது குரு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது ஒற்றுமை பயணம் குறித்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பா.ஜ.க தலைமையிலான அரசு காரணமே இல்லாமல் தன் மீது வழக்கு போட முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். ஒற்றுமை பயணத்தை குண்டு துளைக்காத காரில் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் | பெங்களூருவில் பாதுகாப்புக்கு 12,000 போலீஸ் குவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் புத்தாண்டு (ஜனவரி 1) தினத்தையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் சாலை உள்ளிட்ட இடங்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெங்களூருவில் குவிந்துள்ளனர். இதனால் வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் … Read more