PPFல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசாங்கம் அடுத்த ஓரிரு நாட்களில் PPF இன் வட்டி விகிதத்தை அதிகரிக்கக்கூடும் எனத்தகவல். பிபிஎஃப் மீதான வட்டியை டிசம்பர் 31, 2022க்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை தற்போது உள்ள வட்டியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை PPF-க்கு வழங்கப்படும் வட்டி விகிதம், அடுத்த ஒரு காலாண்டில் அதாவது … Read more

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்ததாக முந்தைய காங்கிரஸ் அரசு மீது அமித் ஷா கடும் தாக்கு

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீதான 1,700 வழக்குகளை ரத்து செய்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார். மாண்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு, சித்தராமையா தலைமையிலான அரசு ஆதரவு அளித்துவந்ததாக விமர்சித்தார். அப்படி மன்னித்து விடப்பட்ட சிலரால்தான், பிரவீன் நெட்டாரு கொலை போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறை கூறினார். 5 ஆண்டுகளுக்கு அந்த இயக்கத்தை பாஜக அரசு தடை செய்திருப்பதாகவும், இத்தடை … Read more

மீண்டும் காங்.கில் சேர திட்டமா? குலாம் நபி ஆசாத் மறுப்பு

புதுடெல்லி: ‘மீண்டும் காங்கிரசில் சேரும் திட்டம் எதுவும் இல்லை’ என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். முன்னாள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரசில் முதல்வர் மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளார்.  கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி‘ஜனநாயக சுதந்திர கட்சி’ என்ற  கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரசில் சேர உள்ளார். அடுத்த மாதம் ராகுல் காந்தி … Read more

எளிமையானவர், அன்பானவர், இனிமையானவர் : அக்கம்பக்கத்தினர் உருக்கம்

காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் ரேசான் பகுதியில் இளையமகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்தார். அப்பகுதியை சேர்ந்த கீர்த்திபென் என்பவர் கூறும்போது,”கடந்த 7 ஆண்டுகளாக ஹீராபென் இங்கு வசிக்கிறார். அவரை நாள்தோறும் சந்திப்போம். அவர் எளிமையாக வாழ்ந்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தினார். இந்த குடியிருப்பின் ராஜ மாதாவாக இருந்தார். எனது சொந்த தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ என்றார். ரேசான் பகுதியை சேர்ந்த ரமேஷ்பிரஜாபதி என்பவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் தாயார் … Read more

year ender 2022: காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மிக்கு திரும்புமுனை ஏற்படுத்திய தேர்தல்கள்!

2022 இல் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய அரசியல் கட்சிகளுக்கு தேசிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த, கவனத்தை பெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ஒரு மீள்பார்வை. பஞ்சாப்பில் வெற்றிக்கொடி நாட்டிய ஆம் ஆத்மிஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு 2022 பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் -பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் மொத்தம் 92 இடங்களில் … Read more

2022-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

மும்பை: 2022-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2021 இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் 74.33-ஆக இருந்த நிலையில், தற்போது 82.74 காசுகளாக சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு, ஒரே ஆண்டில் 10%-க்கு மேல் சரிந்திருப்பது, 2013-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

ஒன்றிய அமைச்சரவை திடீர் மாற்றம்? மோடி போடும் திட்டம் என்ன?

தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஜூன்8ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது 12 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், 2023 ஜனவரி இறுதியில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடா் இரண்டு அமா்வுகளாக நடத்தப்படும். ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதியில் குடியரசுத் தலைவா் … Read more

'அவரு யாருனே எனக்கு தெரியாது' – ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சொன்னது என்ன?

இந்திய கிரிக்கெட் வீர்ர ரிஷப் உத்தரகண்ட் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிதுவார் மாவட்டம் ரூர்க்கி பகுதியில் வந்துகொண்டிருந்த போது, தூக்கத்தில் ஓட்டியாதால் சாலையின் டிவைடரில் மோதி விபத்தில் ஏற்பட்டதாக ரிஷப் பண்ட் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதில் அவர் அதிவேகமாக காரை இயக்கி வந்தது தெரிந்தது. மேலும், கார் மோதிய வேகத்தில் தீ பிடித்து … Read more

ரிஷப் பந்த் கார் விபத்துக்கு காரணம் என்ன ? வெளியானது பிசிசிஐ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் குறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் தனியாக இரவில் கார் ஓட்டி வந்தபோது, கண் அசந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளில் மோதி தீப்பிடித்ததாகவும், கார் கதவை உடைத்துக் கொண்டு, ரிஷப் பந்த் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹரியானா அரசுப்போக்குவரத்து பேருந்து நடத்துனர் பரம்ஜித் மற்றும் ஓட்டுனர் சுஷில் குமார் … Read more

இந்தியாவின் இருமல் மருந்து காரணமாக 18 குழந்தைகள் உயிரிழப்பு: உற்பத்தி நிறுத்தம்

நொய்டா: உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்தியாவின் இருமல் மருந்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.