பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ்? குஜராத் அரசு தகவல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த ஜூன் மாதம் தனது 99-வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி | கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு … Read more

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் – அமைச்சர் ரோஜா

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்றும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

குவியும் சுற்றுலா பயணிகள்… புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோலகலாமாக தயாராகும் புதுச்சேரி!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது புதுச்சேரி. சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. ஆனால் கொரோனா தாக்கத்தால் 2020, 2021 புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் ஏதும் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு 2021-ல் ஓரளவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா அச்சம் … Read more

பள்ளி சென்று கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை..!!

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வந்த ஜெய்ராம் நாயக் (20) என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியுடன் ஜெய்ராம் நாயக்குக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதற்கிடையே அந்த கிராமத்தை விட்டு ஜெய்ராம் நாயக் … Read more

மைசூருவில் தேவாலயம் மீது தாக்குதல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவின் மைசூருவில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்டணாவில் தூய மரியன்னை தேவாலயம் உள்ளது. திங்கள்கிழமை இரவு தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோரின் சிலைகளை தாக்கி சேதப்படுத்தினர். மேலும் தேவாலயத்தில் இருந்த பொருட்களை கீழே போட்டு உடைத்த‌னர். அங்கிருந்த 4 உண்டியல்களையும் உடைக்க முயற்சித்துள்ள‌னர். அப்போது தேவாலயத்தின் காவலர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் வெளியூருக்கு சென்று பணிபுரியும் நபர்கள், தேர்தலில் வாக்களிக்க சொந்த தொகுதிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் … Read more

அரசியலமைப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரேநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல்

டெல்லி: அரசியலமைப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரேநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் சட்டத்தை மாற்றம் செய்யாத வகையில் அமல்படுத்தப்படும் எனவும் வி.கே.சிங் கூறினார்.

அன்று கட்டட வேலை, இன்று `முனைவர் பட்டம்!’ கேரள பழங்குடியின இளைஞருக்கு குவியும் வாழ்த்துகள்

கேரளாவின் பாலக்காட்டில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சந்திரன் பெற்றுள்ளார். கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி (Goddiyarkandi) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கன் – லட்சுமி தம்பதியர். இவர்களது மகன் சந்திரன், லக்னோவில் ரேபரேலியில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அட்டப்பாடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன், … Read more