'எல்லா விதத்திலும் மக்கள் சிரமப்படுகின்றனர்'- மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

காங்கிரஸ் கட்சியில் 138-வது தொடக்க நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.விழாவில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கார்கே பேசுகையில் , சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் பயணம் நவீன இந்தியாவின் கதையைச் சொல்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு வெற்றிகரமான மைல்கல்லிலும் காங்கிரஸின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் வெற்றிகரமான மற்றும் வலுவான ஜனநாயக நாடாக மாறியது மட்டுமல்லாமல், சில தசாப்தங்களில் பொருளாதாரம், அணுசக்தி, ஏவுகணை மற்றும் மூலோபாய துறையில் … Read more

உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை: சிபிஐ

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. 2012ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரில் உண்மையில்லை என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும், … Read more

ஆமா, புல்லட்ட எங்கயா போடுற? குண்டு போட தெரியாத போலீஸ்… உ.பி.,யில் ஆடிப் போன டிஐஜி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கியில் தோட்டாவை லோட் பண்ண தெரியாமல் எஸ்.ஐ ஒருவர் உயர் அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் சந்த் கபிர் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு டிஐஜி ஆர்.கே.பரத்வாஜ் திடீரென ஆய்விற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கேள்வி எழுப்பினார். டிஐஜி திடீர் ஆய்வு பின்னர் அதனை பயன்படுத்திக் காட்டுமாறு உத்தரவிட்டார். அப்போது, எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்தார். … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. அதில் டெல்லி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கடித்ததில் குற்றச்சாட்டியுள்ளார். அடுத்தகட்ட … Read more

Lift-ல் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய `முதலாளி’, தன் செயலுக்கு ட்வீட் வழியாக புது விளக்கம்!

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண்ணை மிக மோசமாக வீட்டு உரிமையாளர் துன்புறுத்திய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. டெல்லியின் நொய்டாவின் சயிஃப் அலி கௌல் என்ற பெண், தன் வீட்டில் 20 வயதாகும் அனிதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் தன் வீட்டின் பணிப்பெண்ணாக சில மாதங்களுக்கு முன் சேர்த்திருக்கிறார். அனிதாவுக்கு சயிஃப் அலி, பல துன்புறுத்தல்களை கொடுத்திருக்கிறார் … Read more

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் – பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம்

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திருப்பதிதிருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் ரெட்டி உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி … Read more

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: பக்தர்கள் கவனத்திற்கு!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை பிஎப்7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. … Read more

Breaking: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ள ஒற்றுமை யாத்திரை பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாக செல்ல உள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு … Read more

பிரியாணியில் எலும்புத் துண்டு இருந்ததால் போலீசை நாடிய நபர்.. மேனேஜர் மீது பாய்ந்த FIR!

குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால் இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக குறிப்பிட்டு உணவக உரிமையாளர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதன்படி, வெஜ் … Read more