“கடிகார நிறுவனத்திடம் பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் அளித்த பாஜகவை தூக்கி எறியுங்கள்” – குஜராத்தில் கேஜ்ரிவால் பிரச்சாரம்

வல்சாட்: “சுவர் கடிகாரம் விற்பவர்களுக்கு பாலம் மறுசீரமைப்பு பணி ஒப்பந்தத்தைக் கொடுத்த பாஜக அரசை தூக்கி எறிந்துவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் கொடுங்கள்” என்று வாக்கு சேகரித்தார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். குஜராத்தின் வல்சாட் நகரில் ஆம் ஆத்மி பேரணி நடந்தது. அதில் பேசிய கேஜ்ரிவால், “மோர்பி நகர் பாலத்தை சீரமைக்கும் பணியை ஒரு சுவர் கடிகார நிறுவனத்திடம் கொடுத்தது பாஜக. அவர்கள் அதுவரை பாலம் கட்டிய அனுபவமே இல்லாதவர்கள். … Read more

ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது; உத்தவ் தாக்கரே அதிரடி.!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்பி, “ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா அவர்களுக்கு தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் கொள்கைகளின் முன்னோடியாக கருதுகிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதி, ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் ஜி முன்னோடியாக இருக்கிறார்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் … Read more

திடீரென திரும்பிய பைக்கால், ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த பெண் மீது பேருந்து ஏறி விபத்து..!

கேரள மாநிலம் கொச்சியில், சாலையில் வேகமாக வந்து திடீரென திரும்பிய பைக்கால், நிலை தடுமாறி இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் மீது பேருந்து ஏறியதில் அவர் உயிரிழந்தார். திருப்பூணித்துற பகுதியில், இருசக்கர வாகனத்தில் காவ்யா என்ற பெண் சென்று கொண்டிருந்த போது, அவரை வேகமாக கடந்த பைக் ஒன்று, திடீரென சாலையின் வலதுபுறம் திரும்பியது. இதில், பைக்கின் பின்பகுதி காவ்யாவின் ஸ்கூட்டரில் மோதிய நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்த காவ்யா மீது பின்னால் வந்த பேருந்து … Read more

தமிழ்நாட்டில் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.32 கோடி மானியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் சிறப்பான அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டு 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது திறன்படைத்த மனித வளத்தை உருவாக்கி, தொழில் நிறுவனங்களின் தேவையினை பூர்த்தி செய்வததையும், அதிக அளவிலான சுயதொழில் தொடங்கும் திறமையினை பயிற்சியாளர்களுக்கு அளிப்பதையும்  நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது. இதன்மூலம், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் … Read more

பீகார்: மயக்கமருந்தே கொடுக்காமல் 24 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: டாக்டரின் ஷாக் விளக்கம்!

வயிற்று வலி சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவரே திருடிய விவகாரத்திற்கே இன்னும் தீர்வு கிடைக்காமல் இருக்கும் வேளையில், பீகாரின் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பீகாரின் ககாரியா என்ற பகுதியில் உள்ள இரண்டு அரசு ஆரம்ப பொது சுகாதார மையத்தில் சுமார் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல், வலியால் அலறிக் கொண்டிருக்கும் போதே கருத்தடை அறுவை … Read more

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு – மருத்துவர்கள் பரிசோதனை

சிலிகுரி: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். மேற்கு வங்கத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிதின் கட்கரி, சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பாஜக எம்.பி. ராஜூ பிஸ்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, நெடுஞ்சாலைத் துறையின் இந்தத் … Read more

காதல் திருமணம் செய்த மகளுக்கு மொட்டை அடித்து விரட்டிய பெற்றோர்..! அழகால் மலர்ந்த காதலுக்கு எதிர்ப்பு

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவன் வீட்டில் இருந்து கடத்திச்சென்று அவரது தலையில் மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர் தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து ஊரை சேர்ந்த  அட்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு ஒன்றில் வாடகைக்கு குடி இருந்து வந்தனர். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத … Read more

நீதிபதி நிகில் கேரியலை பாட்னாற்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்த வழக்கறிஞர்கள்

சூரத்: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கேரியலை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலீஜியம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கேரியலை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து குஜராத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அரவிந்த் குமாரை அவரது அறையில் சந்தித்த 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிபதி நிகில் கேரியல் இடமாற்றம் செய்யப்படுவதற்கு … Read more

”என் கிட்னியை எடுத்த அந்த டாக்டர் கிட்னிதான் வேணும்” – பீகார் பெண் காட்டம்.. நடந்தது என்ன?

கருப்பை தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர் ஒருவர் திருடிய அதிர்ச்சிகர சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. கிட்னிகளை திருடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தினமும் டையாலிசிஸ் சிகிச்சை கொடுத்தாலும் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். பீகாரின் முஸாஃபர்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி என்ற 38 வயதான பெண். தனக்கு வயிற்று வலி இருக்கிறது என பரியாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது கர்ப்பப்பையில் தொற்று இருப்பதால் சிறிய … Read more

”என் கிட்னியை எடுத்த அந்த டாக்டர் கிட்னிதான் வேணும்” – பீகார் பெண் காட்டம்.. நடந்தது என்ன?

கருப்பை தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர் ஒருவர் திருடிய அதிர்ச்சிகர சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. கிட்னிகளை திருடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தினமும் டையாலிசிஸ் சிகிச்சை கொடுத்தாலும் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். பீகாரின் முஸாஃபர்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி என்ற 38 வயதான பெண். தனக்கு வயிற்று வலி இருக்கிறது என பரியாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரது கர்ப்பப்பையில் தொற்று இருப்பதால் சிறிய … Read more