அதிர்ச்சி! இஸ்லாமிய மாணவனை தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியர்!!

வகுப்பறையில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவரை தீவிரவாதி என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். அப்போது வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த பேராசிரியர் நீல நிற சட்டை அணிந்திருந்த இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி என்ற அர்த்தத்தில் பேசினார். ஆசிரியரின் இந்த கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன், இத்தனை பேருக்கு முன்னாள் அவ்வாறு எப்படி அழைக்கலாம். இது வகுப்பறை நீங்கள் ஒரு ஆசிரியர், இப்படி பேசலாமா என்று … Read more

வேகமாக பரவும் தட்டம்மை – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக குடிசை பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மும்பையில் புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தட்டமைக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மும்பை மாநகராட்சி வெளியிட்டு … Read more

கட்டாய மதமாற்றம் என்பது அடிப்படை உரிமை கிடையாது: ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி: ஒருவர் மற்றொருவரை கட்டாய மதமாற்றம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  ‘கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்’ என்று கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் முக்கியமான  பிரச்னையாகும். அது நாட்டில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. … Read more

துண்டு துண்டாக வெட்டி கொலை… மீண்டும் அதிர்ச்சி..!!

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இந்த தம்பதிக்கு தீபக் என்ற மகன் உள்ளான். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. … Read more

ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்..6-வது நாளாக இணைய சேவை முடக்கம்..!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை புகழ்பெற்றது, பல்வேறு நவீன சிகிச்சைகளுக்கும், உயிர்காக்கும் அறுவைசிகிச்சைகளுக்கும் பெயர் பெற்ற மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில்ஆண்டுக்கு 15 லட்சம் பேர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 80 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு நோயாளி பதிவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கணினி பயன்பாடே முதன்மையாக உள்ளது. இதனால் பணிகள் வேகமாக நடக்கும். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி திடீரென இணைய சேவை இங்கு பாதிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கணினி சீட்டு வழங்க முடியவில்லை. … Read more

குஜராத்தில் டிச.1-ல் முதல்கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1-ல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்கட்டத் தேர்தலில் மொத்தமுள்ள 89 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை … Read more

மேலும் 3 பெண் சிவிங்கி புலிகள் காட்டில் விடுவிப்பு

சியோபூர்: இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கி புலிகளை மீண்டும் இனப்பெருக்கம் செய்ய ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 3ஆண், 5 பெண் என 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டன. இவை மத்தியப்பிரதேசத்தின் சியோப்பூரில் உள்ள  குனோ தேசிய உயிரியல் பூங்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டன. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்.17ம்  தேதி கூண்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இவற்றை திறந்து விட்டார். இந்த சிவிங்கி புலிகள் பூங்காவில் இந்திய சூழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டன. இந்திய சுற்றுச்சூழலை ஏற்று … Read more

மாணவனுக்கு தீவிரவாதி பட்டம் பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

உடுப்பி: கர்நாடகாவில் தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பின் போது முஸ்லிம் மாணவரை ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் மற்றும் பேராசிரியரிடையே கடந்த வாரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், வகுப்பின் போது பேராசிரியர் ஒருவர், வகுப்பறையில் மாணவனின் பெயரை கேட்கிறார். அவர் முஸ்லிம் பெயரை சொன்னதும், … Read more

முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிச.1ல் வாக்குப்பதிவு குஜராத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது: இறுதி கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1,5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக டிச.1ம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.   … Read more

நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று காட்டமாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசால் தாமதப்படுத்துவது குறித்து பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் பாய் அமித் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ். … Read more