பயிர் காப்பீடு திட்டத்தில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம்: ஒன்றிய வேளாண் அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மாறி வரும் பருவநிலை, தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜா கூறியதாவது:இயற்கை சீற்றம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க பிரதமரின் பீமா யோஜனா பயிர் காப்பீடுத் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பருவநிலை மாறுபாடு காரணமாக வேளாண் விவசாயிகள், பெருமளவில் … Read more

தட்டம்மை, ருபெல்லா வைரசை தடுக்க குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் 4 கோடி குழந்தைகள் தட்டம்மைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை’ என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவில் பீகார், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட் , மகாராஷ்டிராவில் தட்டம்மை, ருபெல்லாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.   இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் அசோக் பாபு அனுப்பி உள்ள … Read more

நாடு முழுவதும் உயரும் பால் விலை.. எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு சதவீதம்? – முழுவிபரம்

நாடு முழுவதும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில் பால் விலையும் உயர்ந்தால் என்ன செய்வது என பொதுமக்கள் விழிபிதுங்கியுள்ளனர். இந்தியக் குடும்பங்களில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களில் பால் இருப்பதால், இந்த ஆண்டு விலை உயர்வு பல இந்தியக் குடும்பங்கள் வெகுவாக பாதித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகரித்ததால், ஆவினில் … Read more

 தலைமறைவு குற்றவாளியாக பாஜ எம்பி அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி பாஜ எம்.பி. அருண்குமார் சாகர். இவர் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்ததாகவும், சுவர் விளம்பரம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கந்த் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஷாஜகான்பூரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது … Read more

டாடா குழுமத்திற்கு விற்கப்படும் 82 ஆண்டுகள் பழமையான 'பிஸ்லேரி' நிறுவனம்; காரணம் இதுதான்!

82 ஆண்டுகள் பழமையான பிஸ்லேரி தண்ணீர் நிறுவனத்தை டாடாவிற்கு சுமார் 7,000 கோடிக்கு விற்க, அந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சௌஹான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் ஒப்பந்தத்தின் படி தற்போதைய நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு பிஸ்லேரியை வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது. பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் ரமேஷ் சௌஹான், குளிர்பான பிராண்டுகளான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்காவை, கோகோ கோலாவுக்கு விற்ற பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிஸ்லேரி நிறுவனத்தை விற்கவுள்ளார். ’’பிஸ்லெரியை … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது..!!

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச்சட்ட விதிகளை மீறுகின்றனவா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை; பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது? என வினவினார். ஒரு கொசு கடிக்கப்போகும் போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

581 கிலோ கஞ்சா மிஸ்ஸிங்.. போலீசார் விளக்கத்தால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம்..!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக மதுரா போலீஸ்சார் மீது குற்றம்சாட்டியுள்ளனர். 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளது. கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க … Read more

7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: கொலீஜியம் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உட்பட ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. கொலீஜியம் என்பது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இந்தத் தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதும், மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதும் ஆகும். இந்நிலையில் இன்று, சென்னை உயர் … Read more

நடிகை சமந்தா, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐதராபாத்: நடிகை சமந்தா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடந்தாண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக அவர் நடனம் ஆடிய ‘‘ஊ சொல்றியா” பாடல் … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷரீக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு … Read more