உ.பி.யில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு: கைதாகிறார் டிக்கெட் பரிசோதகர்

பெரேலி: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு சிங் கடந்த 17 ஆம் தேதி அசாம் திப்ருகர் புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அப்போது பெரேலி ரயில் நிலையம் நடை மேடை 2-ல் ஓடும் ரயிலில் இருந்து சோனு சிங் தள்ளிவிடப்பட்டார். இது குறித்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்கான அங்க பிரதட்சண இலவச டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் ஆன்லைனில் 25ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. முதலில் பதிவு … Read more

டெல்லி ஜமா மஸ்ஜித்க்குள் பெண்கள் நுழைய குடும்பத்தின் ஓர் ஆண் உடன் வரணும் – திடீர் தடை ஏன்?

டெல்லி ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு, மசூதி வளாகத்திற்குள் ஒரு தனிப் பெண்ணோ அல்லது பெண்கள் குழுவாகவோ நுழைவதைத் தடை செய்ததுள்ளது. ஜமா மஸ்ஜித்துக்கு பெண்கள் வர வேண்டும் என்றால் அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் உடனே உள்ளே வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த விவகாரம் தொடர்பாக ஜமா மஸ்ஜித் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இதுபோன்ற தடையை பிறப்பிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வலக்கை நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? என கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசு காளைகளை விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட திருத்தம் … Read more

”தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது” – உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டாம் தேதி தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்களை … Read more

பா.ஜ எம்.பி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி பா.ஜனதா எம்.பி. அருண்குமார் சாகர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்ததாகவும், சுவர் விளம்பரம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது கந்த் போலீஸ் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஷாஜகான்பூரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின்போது ஆஜராகாததால், … Read more

”500 கிலோ கஞ்சாவை எலிகள் ஏப்பம் விட்டிருச்சு”.. உ.பி. போலீசின் பதிலால் ஷாக்கான நீதிபதிகள்!

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ கிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினரே பதிலளித்திருப்பது நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. எந்த மாநிலத்தின் போலீசார் இப்படியான பதிலை கூறியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறதா? வேறெங்கும் இல்லை. சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பிரபலமான உத்தர பிரதேசத்தில்தான் நடந்திருக்கிறது. அதாவதும், 386, 195 கிலோ என இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 586 கிலோ கஞ்சாவில் 500 கிலோ கஞ்சாவை கிடங்கில் இருந்த … Read more

தேர்தல் ஆணையராக அருண் கோயலை மின்னல் வேகத்தில் நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: அருண் கோயலை தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் நியமிக்க வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. … Read more

பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகும் நிதியமைச்சர்; மாநில நிதி அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துதல் உட்பட அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு முன்னால், அரசாங்கம் என்ன மாதிரியான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். பட்ஜெட் மீதான விரிவான ஆலோசனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டத்தில், பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி … Read more

ஜம்முவில் சோகம்: சிலிண்டர் வெடித்து பெண், குழந்தை பரிதாப பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் புஃப்லியாஸ் பகுதியில் உள்ள சண்டிமார் கிராமத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் சுவர்கள் இடிந்து நொறுங்கியது. வீட்டில் இருந்த 35 வயது பெண், 3 வயது குழந்தை, தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு குழந்தை காயமடைந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.