8 நானோ செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி 54 வெற்றிகரமாக பாய்ந்தது: அமெரிக்கா, பூடான் நாடுகளின் செயற்கைகோளையும் சுமந்து சென்று சாதனை..!

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 நானோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் ‘ஓசன் சாட்-3’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி … Read more

”லவ் பிரேக்கப்பா? இந்த ஆஃபர் உங்களுக்குதான்” -Ex-GF பெயரில் டீக்கடை நடத்தும் ம.பி. இளைஞன்!

“லவ் ஃபெய்லியர் ஆனதும் லைஃப் இல்லனா, 25 வயசுக்கு மேல இங்க எவனுமே வாழமாட்டான்” என ராஜா ராணி படத்தில் சந்தானம் ஆர்யாவிடமும், “என் லவ் ஃபெய்லியர் ஆகிடுச்சுனு சோகப்பாட்டு பாடிட்டு தாடி வெச்சிட்டு ரோட்டுல சுத்துவனு நினைச்சியா” என வல்லவன் படத்தில் சிம்பு ரீமா சென்னிடமும் சொல்லும் வசனங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமே. ஆனால் இந்த வசனங்களை மெய்ப்பிக்கும் விதமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்விக்கு பிறகும் தனக்கென வாழ்க்கை … Read more

Constitution Day: 'நாட்டின் மிகப்பெரிய சக்தி அரசியலமைப்பு' – பிரதமர் மோடி பெருமிதம்!

“இந்தியாவின் மிகப்பெரிய சக்தி அதன் அரசியல் அமைப்பு,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், … Read more

அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஆந்திரா: அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே – 3 ராக்கெட்களை தொடர்ச்சியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம்  என்று கூறினார்.

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி. எஸ்.எல்.வி சி-54 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி சி-54 ராக்கெட், புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி -சி 54 ராக்கெட் ஏந்திச் சென்றுள்ள செயற்கைக்கோள்களை பற்றி விரிவாக பார்க்கலாம். ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை PSLV C54 ராக்கெட் ஏந்திச் சென்றுள்ளது. இது 56 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டராகவும், அகலம் 4.8 மீட்டராகவும் உள்ளது. ராக்கெட் 321 டன் எடை கொண்டது. … Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

புவிநோக்கு செயற்கைகோள் இஓஎஸ்-06, 8 நானோ செயற்கைக் கோள்கள் உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு, ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்கள் மற்றும் பூடானின் 2 செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராக்கெட்டுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செயல்பாடு திட்டமிட்டபடி சென்றுகொண்டுள்ளது. 8 … Read more

'பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது': இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஆந்திரா: பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், சரியான திசைவேகத்தில் ராக்கெட் செல்கிறது. இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது. ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் தளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றது என்று கூறினார்.

ரயில் என்ஜினையே திருடிச் சென்ற பலே திருடர்கள் – 13 சாக்கு மூட்டைகளில் அள்ளிய போலீசார்

ரயிலில் நடக்கும் திருட்டு சம்பவத்தின் செய்திகளைதான் நாம் பார்ப்பது, படிப்பது வழக்கம். ஆனால் சுரங்கப் பாதை அமைத்து பழுதுப் பார்க்க வைத்திருந்த டீசல் என்ஜினையே கொஞ்சம் கொஞ்சமாக திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் போலீசாரை அதிர வைத்துள்ளது. மேலும் தொடர்ந்து என்ஜினின் உதிரிப் பாகங்கள் உள்பட திருடர்கள் திருடிச் சென்ற இரும்புப் பொருட்கள்,13 சாக்கு மூட்டைகளில் இருந்ததைக் கண்டுப்பிடித்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் கர்ஹரா ரயில் யார்டில் பழுதுப் பார்ப்பதற்காக ரயில் பெட்டிகள், … Read more

ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த், ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!

பெங்களூரு: ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகளான தேவானந்த் மற்றும் ரமேஷ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி தேவானந்த் சென்னை ஐகோர்ட்டுக்கும், நீதிபதி ரமேஷ் அலகாபாத் ஐகோர்ட்டுக்கும் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 2 நீதிபதிகள் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் அடுத்தாண்டில் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா-சித்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தகவல்

சித்தூர் : சித்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி தெரிவித்துள்ளார். சித்தூர் அம்பேத்கர் பவனில் நம் பூமி நம் உரிமை திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி தலைமை தாங்கி 587 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் தேர்தலின் போது மேற்கொண்ட பாதையாத்திரையின்போது நவரத்தினா … Read more