‘இது தமிழகம் அல்ல’ என்று கத்தியவாறு கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். … Read more

வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம்; காதலியின் கழுத்தை அறுத்து குளத்தில் வீசியெறிந்த காதலன்: துப்பாக்கிச் சூடு நடத்தி கொலையாளியை பிடித்த உ.பி போலீஸ்

அசம்கர்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் அவரது தலையை துண்டித்து குளத்தில் வீசிய காதலனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் கவுரி கா புரா என்ற கிராமத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை அதேபகுதியில் இருந்த கிணற்றிலும் வீசப்பட்டு இருந்தது. இந்த கொலைச் சம்பவம் … Read more

பாஜக எம்எல்ஏவுக்கு தர்ம அடி – சட்டையை கிழித்த பொது மக்கள்!

யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையேயான மோதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. யானைகள் சராசரியாக 250 கிலோ அளவிலான உணவை உட்கொள்கிறது. யானை தனக்காக தயார் செய்யும் உணவில் பெரும் பகுதியை அப்படியே விட்டுச் செல்கிறது. அவை சிறிய விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. வன உணவுச் சங்கிலியில் யானையில் பங்கு முக்கியமானது. யானைகள் பயன்படுத்தாத காடுகளில் மனிதனால் நுழைய முடியாது. உணவிற்காகவும் காலநிலையைப் பொறுத்தும் யானைகள் ஒரு வனப்பகுதியிலிருந்து வேறு ஒரு வனப்பகுதிக்குச் செல்கின்றன. யானைகளின் வாழ்விடம் என்பது ஒரே … Read more

11 எம்.எல்.ஏக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த டெல்லி பாஜக

நியூடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரை பாரதிய ஜனதா கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த 11 எம்.எல்.ஏக்களும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் இந்த எம்.எல்.ஏக்களினால் கட்சிக்கு பாதகம் வரும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சி திடீரென முடிவெடுத்துள்ளது.   இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. Delhi BJP suspends 11 rebel candidates from the party for 6 … Read more

கொச்சியில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றபோது கேரள தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்றிரவு 11 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அப்போது சேராநல்லூர் என்ற பகுதியில் இருந்து ஒருவர், தலைமை நீதிபதியின் … Read more

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம்.. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி சுரேந்திர நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், பாதயாத்திரையாக செல்பவர்களையும், நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்களையும், இந்த தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என்றார். நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பு உள்ளதாகவும், அந்த உப்பை உட்கொண்டு சிலர், மாநிலத்திற்கே … Read more

ஆட்சி, அதிகாரம் நிரந்தரமானது அல்ல: மோடியை மீண்டும் தாக்கிய சத்ய பால் மாலிக்

ஜெய்ப்பூர்: ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் காட்டமாக தெரிவித்தார். மேகாலயாவின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல; இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை யாராலும் அசைக்க முடியாது என்று  சொல்லப்பட்டாலும் கூட, … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு | ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: கர்நாடக போலீஸ்

மங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இருந்த குக்கர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள் உள்ளிட்டவை இருந்ததைக் கண்டு அவற்றை கைப்பற்றினர். இதை … Read more

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் சங்க நிர்வாகிகளின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான 3 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2011ஆம் ஆண்டில் இருந்து அந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், அதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் சிபிஐயிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து, செஞ்சிலுவை சங்க தமிழக நிர்வாகிகள் 6 பேர் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கினை அமலாக்க … Read more

என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

சூரத்: என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேற்கொண்டார். சுரேந்திர நகரில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி; ஒரு காலத்தில் சைக்கிளை கூட தயாரிக்காத மாநிலமாக இருந்த குஜராத், தற்போது விமானத்தை … Read more