ஒடிசாவில் இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி: பயணிகள் காத்திருப்பு கட்டிடமும் சேதம்

ஜாஜ்பூர்: ஒடிசாவில் இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் காத்திருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பத்ரக் – கபிலாஸ் சரக்கு ரயில், பத்ரக்கில் இருந்து கட்டாக் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் அடுத்த கோரை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபருடைய பெயரை நீக்கும் போது முன்னதாகவே சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கங்களை பெற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனு மீது பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேவ சகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் நீக்கப்படுவதாகவும் இது கடுமையான குழப்பங்களை … Read more

ஆன்மீகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம் அதிகம்: வாரணாசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர் பதில்கள் வருமாறு: மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில், பிரதமர் மோடியுடன் மேடையில் அமரும் வாய்ப்பு கட்சியின் மாநிலத் தலைவரான உங்களுக்கு கிடைத்தது. அதை எப்படி உணர்ந்தீர்கள்? நிச்சயமாக எனக்கு இது ஏன் எனத் தெரியாது? இது, … Read more

ISIS உடன் மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தொடர்பு? – திடுக்கிடும் தகவல்கள்!

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷரீக், ஐஸ்ஐஎஸ் அமைப்பு மூலம் ஈர்க்கப்பட்டு சதிச் செயல்களில் ஈடுபட்டதாக, கர்நாடக மாநில ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரில், அண்மையில், ஆட்டோ ஒன்றில் குண்டு வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்டோவில் குண்டு வெடித்து சிதறியது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கர்நாடக … Read more

கொல்கத்தா வந்த உலகின் பிரம்மாண்ட திமிங்கல வடிவ விமானம்! வாய் பிளந்த பயணிகள்!

கொல்கத்தா விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகாவைப் பார்த்த விமானப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பிரம்மாண்டமான வடிவ அமைப்பினால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகில் பல்வேறு வகையான விமானங்கள் உள்ளன. ஆனால் சமீபத்தில் ஒரு விமானம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய விமானம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா, நவம்பர் 20 அன்று, கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதைக் காண … Read more

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு: ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை!

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மங்களூர் அருகிலுள்ள நாகுரி பகுதியை போலீசார் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணையை துவங்கியுள்ளனர். இதில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பல முறை சிறைக்கு சென்ற ஷாரிக் வெளியே வந்த பிறகு சில மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய … Read more

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை தொடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களை ஒன்றிய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்கும் பரிந்துரையின் மூலம் சுமார் 5.83 கோடி பேர் பயனடையலாம் என்று சிஐஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட் – … Read more

”கல்வியைபோல வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு தேவை” – ஜிப்மர் முன்பு அதிமுக ஆர்ப்பாட்டம்!

ஜிப்மர் மருத்துவமனை வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், ஜிப்மர் மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஜிப்மர் நிர்வாகம், செவிலியர் பணி தேர்வுக்கான அகில இந்திய அளவில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 450 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அகில இந்திய அளவில் தேர்வு நடைபெற உள்ளது. அகில இந்திய அளவில் இந்த … Read more

ராமர் அனைவருக்கும் சொந்தம்: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: தேசிய மாநாடு கட்சியின் சார்பில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது: இந்திய பிரிவினை காலத்தில் முகமது அலி ஜின்னா எனது தந்தை ஷேக் முகமது அப்துல்லாவின் ஆதரவை கோரினார். அப்போது எனது தந்தை இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார். நல்ல வேளையாக காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவில்லை. இந்தியாவில் 80 சதவீதம் பேர் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. எந்த மதமும் … Read more

குக்கர் குண்டுவெடிப்பு… கோவைக்கும், மங்களூருவிற்கும் என்ன தொடர்பு? ஆக்‌ஷனில் கர்நாடக போலீஸ்!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர். இதனால் ஜமீஷா முபினுக்கும், முகமது ஷாரித்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலம் கோவையில் யாருடனாவது … Read more