வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வட திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் கோயில்கள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று ஆந்திரா, தெலங்கானாவில் அனைத்து முக்கிய கோயில்களின் நடை சாத்தப்பட்டது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், அன்னவரம் சத்தியநாராயணர் கோயில், ஸ்ரீ சைலம் … Read more

தீவிரவாதிகளின் உடற்பசிக்கு இரையாகும் பெண்கள்?..தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை.!

இந்தி பட இயக்குநரான சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் கடந்த நவ.3ம் தேதி வெளியானது. சுமார் 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். கேரளாவில் எப்படி பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை ஹிஜாப் அணிந்த பெண் கூறுகிறார். கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், கடந்த 2009ம் ஆண்டு முதல் … Read more

சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒரு பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்தியா நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. சென்னை ஐஐடியில் கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின்னர் அமெரிக்காவில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். தொடக்க காலத்தில் அமெரிக்காவில் பணி புரிந்த ஸ்ரீதர் வேம்பு, பின்னர் நாட்டிற்கு ஏதேவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னை திரும்பி வந்து அட்வன்ட் நெட் என்ற நிறுவனத்தினை தொடங்கினார். … Read more

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் சுமார் 8டன் பறிமுதல்: சென்னையை சேர்ந்த மொத்த வியாபாரிகள் 7 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் சுமார் 8 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி கோரிமேடு எல்லைக்கு உட்பட பகுதியில் கடை மற்றும் குடவுனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் மதிப்பிலான 100கி தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் 24 லட்சம் 50ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு மணிகண்டனை கைது … Read more

கேரள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) பிரமுகர் எம்.சுபேர் கொல்லப்பட்ட மறுநாள் இந்தக் கொலை சம்பவம் நடந்தது. ஸ்ரீனிவாசன் கொலை தொடர்பாக எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ (பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா) அமைப்பை சேர்ந்த பலரை சிறப்பு புலனாய்வுக் … Read more

5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் – பிரதமர் நரேந்திர மோடி..!

5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு வரை நாட்டின் காவல் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்ததாக கூறினார்.  முன்னதாக, சம்பி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தமது வாகனத்தை பிரதமர் மோடி நிறுத்தினார். … Read more

கொரோனா கால இடையூறு முடிந்ததால் தினமும் 60 கி.மீ நெடுஞ்சாலை போட இலக்கு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: கொரோனா கால இடையூறுகள் முடிந்ததால் தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். டெல்லியின் குர்கிராமில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசுகையில், ‘சிறந்த சாலை உள்கட்டமைப்பு வசதிகளே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. அந்த வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள்  மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் … Read more

அதிக காற்று மாசு நகரங்களின் பட்டியலில் பிஹாரின் கதிஹார் நகருக்கு முதலிடம்

புதுடெல்லி: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிக மோசமாக காற்று மாசுபாடு நிலவும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிஹார் மாநிலத்தின் கதிஹார் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு நடப்பு ஆண்டு மிகவும் மோசமடைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைந்தது. காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த வாரம் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. Source link

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை ரயில்கள் தாமதம்

ஐதராபாத்: ராஜமுந்திரியில் சரக்கு ரயில் தடம் புரண்டதையடுத்து தென் மத்திய ரயில்வே நிர்வாகம் பல பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் வழியாக இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டு சரக்கு ரயில் திடீரெ தடம் புரண்டதையடுத்து, அவ்வழியாக செல்லும் பல ரயில்களை தென்மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ ராஜமுந்திரியில் சரக்கு … Read more