பஸ்சை தூக்கி போட்டு ‘கபாலி’ அட்டகாசம்: 50 பயணிகள் அலறல்

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே ‘கபாலி’ யானை 50 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சை தந்தத்தால் தூக்கிப் போட்டு பயணிகளை கதிகலங்க வைத்து உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை, கடந்த சில தினங்களுக்கு முன் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ … Read more

முகம் முழுவதும் முடி வளரும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலம் ராட்லாம் மாவட்டம் நண்ட்லெட்டா கிராமத்தை சேர்ந்த லலித் படிதார் என்ற இளைஞருக்கு பிறந்ததில் இருந்தே முகம் உள்பட உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது. எனவே, அவர் அந்த கிராமத்தில் விசித்திரமானவராக திகழ்ந்துள்ளார். அவருக்கு 6 வயது இருக்கும்போது குரங்கு மனிதர் என அக்கம் பக்கத்தினரால் அழைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை இல்லை. இவருக்கு உள்ளூர் தொண்டு நிறுவனங்களில் உதவியோடு மருத்துவ நிபுணர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் … Read more

அரசு மருத்துவமனையில் சிசுவை கவ்விக்கொண்டு ஓடிய நாய்!!

அரசு மருத்துவமனை அருகில் நாய் ஒன்று சிசுவின் உடலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேரி என்னும் இடத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக் கொண்டு சுற்றி திரிந்துள்ளது. எதேச்சையாக பார்த்த ஒருவர், நாய் கவ்வியிருப்பது சிசுவின் உடல் என்று கண்டுபிடித்தார். இதனையடுத்து சிலர் நாயை விரட்டி சென்றனர். ஆனால் நாய் விடாமல் ஓடியது. ஒருகட்டத்தில் வாயில் கவ்வியிருந்த … Read more

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது எலிகள்: உபி. போலீஸ் அறிக்கை; நீதிபதி அதிர்ச்சி

மதுரா: உத்தரப்பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் அளித்த அறிக்கையால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில்  போதைப்பொருள் கடத்தல் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஷெர்கர் காவல்நிலைய கிடங்கில் 386 கிலோ கஞ்சாவும்,  நெடுஞ்சாலை காவல்நிலைய கிடங்கில் 195 கிலோ கஞ்சாவும் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட … Read more

ஜம்மு காஷ்மீரில் டிரோனில் இருந்து பணமழை: ஆயுதங்களும் வீச்சு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 5-6கி.மீ. தொலைவில் உள்ள ராம்கர் மற்றும் விஜய்பூருக்கு இடையே காலை 6.15மணியளவில் பிஸ்டல், வெடிகுண்டுகள் மற்றும் பணம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து டெட்டனேட்டர்கள் சென்று ஆய்வு செய்தபோது, இரண்டு சீன துப்பாக்கிகள், … Read more

மங்களூர் குண்டுவெடிப்புக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது..!!

மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்பு உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்து … Read more

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் – இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில், ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியும்(37), அதில் பயணம் செய்த முகமது ஷரீக்கும்(24) காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், முகமது ஷரீக்குடன் தொடர்பில் … Read more

டெல்லியில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் பெண்களுக்கு தடை: கவர்னர் வேண்டுகோளை ஏற்று உடனடி வாபஸ்

புதுடெல்லி: டெல்லி ஜூம்மா மசூதியில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபடுவதற்கு தடை இல்லை என்று மசூதி இமாம் தெரிவித்தார். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி இருக்கிறது. இது வழிபாட்டு தலமாகவும் பழமை வாய்ந்த சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. தொழுக்கைக்காக பக்தர்களும், பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகிறன்றனர். இந்நிலையில் மசூதிக்குள் பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ வர அனுமதி இல்லை என்று மசூதியின் பிரதான நுழைவு வாயிலில் நோட்டீஸ் … Read more

கேரளாவில் போதை பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேர் குத்திகொலை: 2 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேரை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம்,  தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷமீர் (40).  இவரது மகன் ஷெபில். கடந்த சில  தினங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் விற்க  முயன்றபோது அதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,  ஷெபிலை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த ஷெபில் தலச்சேரி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் … Read more

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டம்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

ஜெய்ப்பூர்: ‘டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்’ என்று ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது. ஆனால் எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சியால் செய்திகளின் தொடர்பு என்பது பன்முகத்தன்மையாகிவிட்டது. டிஜிட்டல் ஊடகங்கள் மூலமாக நாட்டில் எதோ ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வு கூட தேசிய அளவில் பிரபலமடைகிறது. டிஜிட்டல் ஊடகங்கள் வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. … Read more