விடுமுறை நாளான நாளை ஓய்வுபெறவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவல் பணி இன்றுடன் நிறைவு: நாளை மறுநாள் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி: விடுமுறை நாளான நாளை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வுபெற உள்ள நிலையில், அவரது அலுவல் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நாளையுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நாளை குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் இன்றுடன் யு.யு.லலித்தின் அலுவல் ரீதியான பணி நிறைவு பெறுகிறது. நாளை அவர் முறைப்படி ஓய்வு பெறுகிறார். … Read more

'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' – டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்!

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை சிபிஐ அமைப்பு விசாரிக்கக் கோரி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். … Read more

“முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்” – 3 நீதிபதிகள் தீர்ப்பு

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது சட்டத்திருத்தம் செல்லும் என, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலுள்ள 5 நீதிபதிகளில், 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், தலைமை நீதிபதி உட்பட இருவர், இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ. லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. … Read more

குமரியில் 9 மணி நேரம் விசாரணை; கிரீஷ்மா வீட்டில் முக்கிய தடயங்கள் சிக்கின: சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று விசாரிக்க போலீஸ் திட்டம்

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டில் கிரீஷ்மா மற்றும் அவரது மாமாவிடம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் 9 மணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர். இதில் முக்கிய தடயங்கள் சிக்கின. இதற்கிடையே கிரீஷ்மா காதலனுடன் ஜாலியாக சுற்றி தங்கிய சுற்றுலா விடுதிகளுக்கும் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன், கொலை வழக்கில் கைதாகிய கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் போலீஸ் … Read more

7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் |  4ல் பாஜக வெற்றி; ஆர்ஜேடிக்கு பின்னடைவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ராநாத் தொகுதி, ஹரியாணாவின் ஆதம்பூர், பிஹாரின் கோபால்கஞ்ச், ஒடிசாவின் தம்நகர் என 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பிஹாரின் மோகமா தொகுதியில் தேஜஸ்வியின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், தெலங்கானாவின் முனுகொடேவில் டிஆர்எஸ் கட்சியும், மும்பை அந்தேரி கிழக்கில் உத்தவ் தலைமையிலான சிவ சேனாவும் வெற்றி பெற்றுள்ளன. முன்னதாக 6 மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, பிஹாரின் மோகமா மற்றும் கோபால்கஞ்ச் … Read more

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு: காங்கிரஸ் வரவேற்பு!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் … Read more

150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று காதலிக்கு தாலி கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர்

திருவனந்தபுரம்: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்ராமன்-ஜோதிமணி தம்பதியின் மகன் சிவசூர்யா. அகமதாபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரியும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சத்யன் மகள் அஞ்சனாவுடன் காதல் மலர்ந்தது. 2 வருடமாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலுக்கு 2 வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று குருவாயூர் கோயிலில் வைத்து 2 பேருக்கும் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்காக மணமகன் சிவசூர்யா கோவையில் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை | ‘உடல்நிலையைப் பொறுத்து சரத் பவார் கலந்துகொள்வார்’ – காங். தகவல் 

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கவுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது உடல்நிலையைப் பொறுத்து கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். அந்த யாத்திரை திங்கள்கிழமை இரவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற இருக்கும் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும், … Read more

விஸ்வரூபம் எடுத்த சிவசேனா தாக்கரே அணி… 2024 இல் பாஜகவுக்கு காத்திருக்கும் சிக்கல்!

தெலங்கானா, பிகார், ஓடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களி்ல் காலியாக இருந்த ஏழு எம்எல்ஏ தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முக்கியமாக மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவு அம்மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் மிகவும் கவனத்தை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிவசேனாவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி உருவாகவே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு சில … Read more

ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் படிக்க 49 வெளிநாட்டு பல்கலையுடன் ஒப்பந்தம்: யுஜிசி தலைவர் தகவல்

புதுடெல்லி: இந்திய மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க வசதியாக 49 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) அறிவித்துள்ளதன் அடிப்படையிலும், பன்முகத் திறனை மாணவர்கள் பெற அனுமதிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. ஒரே நேரத்திலான 2 பட்டப் படிப்புகளை, மாணவர்கள் … Read more