சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரண்டாம் நாளிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவரும் நிலை உருவாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் “ஸ்பாட் புக்கிங்” வசதி செய்யப்பட்டுள்ளது. … Read more

சவுதி செல்ல இனி இது தேவையில்லை..!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், இந்தியர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கெடுபிடி காட்டினார். இதனால், இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிபர் பைடன் இந்தியர்களுக்கான விசா கெடுபிடிகளை தளர்த்தினார். … Read more

பாஜகவை விமர்சிப்பதால் என்னுடன் நடிக்க அச்சப்படுகிறார்கள்; நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!

கர்நாடக பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தனது குற்றப்பத்திரிகையில் இந்துத்துவா ஆதரவுக் குழுவான சனாதன் சன்ஸ்தாவின் பெயரைப் பதிவு செய்துள்ளது. இந்த படுகொலையை தொடர்ந்து கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்பட நடிகருமான பிரகாஷ்ராஜ், பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக … Read more

சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி 30 பேர் பலி?; ஜார்கண்டில் இன்று காலை சோகம்

தன்பாத்: ஜார்கண்டில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி 30 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அடுத்த கபசரா அவுட்சோர்சிங் காலியரியில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பீதி … Read more

தெலங்கானா அரசு கல்லூரியில் வாயு கசிவு; 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கஸ்தூர்பா கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், சுமார் 25 மாணவர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 25 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டத்தை தொடர்ந்து, கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், அரசு கல்லூரிக்கு விரைந்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் திடிரென வாயு கசிவு ஏற்பட்டது குறித்து, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Breaking! பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன மத்திய அரசு பணியாளர் டெல்லியில் கைது

நியூடெல்லி: பாகிஸ்தானுக்கு ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வாகன ஓட்டுநராக அமைச்சகத்தில் பணி புரிந்து வந்த டிரைவரை, பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு கைது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. Delhi … Read more

ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு: 25 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

தெலங்கானா: ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன வாயு கசிவினால் 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2024 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அரசியலுக்கு முழுக்கு போடுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

கர்னூல்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்னூல் மாவட்டத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறந்தவெளி வேனில் சென்றபடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். கர்னூல் மாவட்டம் ஆதோனியில் நேற்று அவர் பேசியதாவது: ஆந்திராவில் விலைவாசி, வரி அதிகரித்து விட்டது. போலி மதுபான விற்பனையால் ஏழைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள். தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன. ஆந்திராவில் அரசியல் காழ்ப்புணர்வால், அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டுவிட்டன ஆனால், தமிழகத்தில் அம்மா உணவகம், ஆட்சி மாறினாலும் … Read more

சரியா பாக்க முடியல..படிக்க முடியல..கண் தெரியமாட்டேங்குது..புலம்பும் சஞ்சய் ராவத்.!

மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத், மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்து, ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட “விக்ரம்- எஸ்”..!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான “விக்ரம் – எஸ்”, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹைதரபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இஸ்ரோ மற்றும் இன்ஸ்பேஸ் அமைப்புடன் இணைந்து தயாரித்த இந்த ராக்கெட், இன்று காலை சரியாக 11.30 மணியளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, திட எரிபொருளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களுடன், 545 கிலோ எடையில், 6 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட், மொத்தமாக 83 கிலோ … Read more