இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram S வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது!

விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல்  ராக்கெட் ஆன விக்ரம்-எஸ்  ராக்கெட்டை இன்று, நவம்பர் 18, 2022 அன்று ஏவியது. இந்திய விண்வெளித் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட் இன்று … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது..!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட், இன்று காலை 11 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் – ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய 3 செயற்கை கோள்களை சுமந்து செல்லும். இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த … Read more

2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி

ஆந்திரா: 50 தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று இன் ஸ்பேஸ் இயக்குநர் கூறியுள்ளார். அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தனியார் நிறுவன ராக்கெட்டுகள் விண்ணில் பறக்கவுள்ளது. 2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இஸ்ரோ அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

'தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும்' – பிரதமர் மோடி

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் (நவ 18, 19) நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்று நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் … Read more

வங்கிகள் இயங்காது… இன்றே உஷார் ஆகுங்கள் மக்களே…

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA)நாளை (நவம்பர் 19) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி பணியாளர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனை கண்டித்து உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம், ஊழியர்களிடம்,”சமீப காலமாக பணியாளர்கள் மீதான வஞ்சகம் அதிகரித்து வருவது மட்டுமின்றி, இவை அனைத்திலும் பொதுவான தொடர்பு ஒன்று உள்ளது. பணியாளர்கள் மீதான இந்த பாரபட்சத்தை திட்டமிட்டு செய்கின்றனர். … Read more

ஸ்கேன் கருவியில் தீப்பிடித்ததால் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சி,டி. ஸ்கேன் கருவியில் திடீரென தீப்பிடித்து பரவியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ வேகமாகப் பரவியதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. நோயாளிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதாறு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைப்பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். … Read more

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, என்னையும் விடுவியுங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி; ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, தன்னையும் விடுவிக்க வேண்டும் என, மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், ஸ்வாமி ஷ்ரதானந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது 29 ஆண்டுகால சிறை வாசத்தில், ஒரு நாள் கூட பரோல் பெற்றதில்லை என உச்சநீதிமன்றத்தில் ஷ்ரதானந்த் வாதம் செய்தார்.

கோவாக்சின் அனுமதி தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது – மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சில நடைமுறைகளை தவிர்த்துவிட்டு இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவாக்சின் அனுமதி தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தி தவறான தகவல். கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு திறன் குறித்த தரவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அதன் பிறகு … Read more

Mission Prarambh: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram-S… புது வரலாறு படைக்கும் ஸ்கைரூட்!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்தி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விண்வெளி துறையில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கின. அதில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்று. இஸ்ரோவில் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா, … Read more

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அருணாச்சல் பிரதேச மாநிலம் இடாநகரில் புதிய விமான நிலையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இடா நகரில் புதிய விமான நிலையம் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான நீர் மின் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாரணாசி செல்ல உள்ள பிரதமர் அங்கு காசி தமிழ் சங்கமம் … Read more