Mission Prarambh: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram-S… புது வரலாறு படைக்கும் ஸ்கைரூட்!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்தி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விண்வெளி துறையில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கின. அதில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்று. இஸ்ரோவில் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா, … Read more

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அருணாச்சல் பிரதேச மாநிலம் இடாநகரில் புதிய விமான நிலையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இடா நகரில் புதிய விமான நிலையம் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான நீர் மின் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாரணாசி செல்ல உள்ள பிரதமர் அங்கு காசி தமிழ் சங்கமம் … Read more

நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து கடந்த 10ம் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இரண்டாவது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உட்பட … Read more

நேபாளத்தில் தேர்தலை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையருக்கு அழைப்பு

புதுடெல்லி: நேபாளத்தில் 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு மாகாண பேரவைக்கான தேர்தல் நேபாளத்தில் வருகிற 20-ம் தேதிநடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு சர்வதேச பார்வையாளராக ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அங்கு நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளில் ராஜீவ் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்து கொள்ள உள்ளது. இந்த குழு நவம்பர் 18 முதல் 22-ம் தேதி வரையில் நேபாளத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை பார்வையிட உள்ளது. காத்மண்டு மற்றும் அதை … Read more

Ration Card: மத்திய அரசு எடுத்த முடிவால் பயனாளிகளுக்கு பெரிய நன்மை

ரேஷன் கார்டு புதுப்பிப்பு: இந்திய நாட்டின் அனைத்து ரேஷன் கார்ட் பயனாளிகளுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி, ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எந்த வித ஏமாற்று வேலையையும் செய்ய முடியாது. ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசாங்கம் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், மோடி அரசாங்கத்தின் லட்சியமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து … Read more

திருமண விழாவில் பஞ்சாபி பாடலுக்கு 2 சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாடப்பட்ட பஞ்சாபி பாடலால் கவரப்பட்ட இரண்டு வயதான சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பொதுவாக பஞ்சாபி பாடல்கள் மனதை மயக்குவது மட்டுமின்றி தங்களை மறந்து நடனம் ஆட தூண்டும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த திருமண விழாவில் பாடப்பட்ட பஞ்சாபி பாbடலுக்கு 2பேரும் உற்சாக பெருக்குடன் நடனம் ஆடினர். Source link

ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11.30 மணிக்கு இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஆந்திரா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கிய விக்ரம் எஸ் ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் செல்கிறது. செயற்கைகோள்கள் 120 கீ.மீ  உயரத்தில் நிலைநிறுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்!!

மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தங்கார் பதவி வகித்து வந்தார். அவருக்கும் மம்தா அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தங்கார் தேர்வு செய்யப்பட்டார். ஜக்தீப் தங்காருக்கு பின் அம்மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டார். … Read more

சிலிகுரி நிகழ்ச்சிக்குப் பிறகு நிதின் கட்கரிக்கு உடல்நலக்குறைவு

சிலிகுரி: மேற்கு வங்கத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் ரூ.1206 கோடி மதிப்பிலான மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேடைக்கு பின் பகுதியில் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கட்கரி காரில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்டாவின் வீட்டுக்கு கட்கரி … Read more

Delhi Shraddha Murder : 'ஆம்பள புத்திதான் காரணம்' – மத்திய அமைச்சரை தாக்கும் பெண் எழுத்தாளர்!

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் சமீபத்தில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு அவற்றை புதைத்துள்ளார்.  அந்த … Read more