மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் – அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் … Read more

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் நேற்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது மறைந்​திருந்த மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து தற்​காப்​புக்​காக பாது​காப்​புப் படை​யினர் பதில் தாக்​குதல் நடத்​தினர். இரு தரப்​பினருக்​கும் இடையே நடந்த கடும் துப்​பாக்​கிச் சண்​டை​யில் 2 பெண்​கள் உட்பட 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். Source link

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது. இதுகுறித்து முகநூலில் காங்​கிரஸ் கட்சி கடும் விமர்​சனம் செய்​திருந்​தது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் விதி​முறை​களின்​படி, … Read more

30 வாக்குகள் வித்தியாசத்தில் மாயாவதி வேட்பாளர் வெற்றி

ராம்கர்: பிஹார் தேர்தலில் ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சதீஷ் குமார் யாதவ் 72,689 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக எம்எல்ஏ அசோக் குமார் சிங் 72,659 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். கடந்த சில ஆண்டுகளாக பிஹார் தேர்தலில் எந்த வெற்றியையும் பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை. இந்நிலையில் அந்தக் … Read more

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய … Read more

அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு

பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம் சாட்டி உள்​ளார். பிஹார் மாநிலத்​தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) தலை​வர் லாலு பிர​சாத், ராப்ரி தம்​ப​தி​யருக்கு மிசா பார​தி, ரோகிணி ஆச்​சார்​யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிர​தாப் யாதவ், ராஜலட்​சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்​ளை​கள் உள்​ளனர். … Read more

மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர்

புதுடெல்லி: டெல்லி குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர், குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் ஆவார். கடந்த 10-ம் தேதி டெல்​லி​யில் வெடிபொருள் நிரப்​பப்​பட்ட கார் வெடித்​துச் சிதறியது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். காஷ்மீரின் புல்​வா​மாவை சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி, கார் குண்டு தாக்​குதலை நடத்​தி​யிருப்​பது உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த வழக்கை தற்​போது தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ) விசா​ரித்து வரு​கிறது. என்ஐஏ நேற்று வெளி​யிட்ட … Read more

பிஹாரில் 25 அமைச்சர்களில் 24 பேர் மீண்டும் அமோக வெற்றி

பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். வேளாண் அமைச்சர் பிரேம்குமார், கயா தொகுதியிலிருந்து … Read more

அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்

பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் … Read more

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோ​ருக்கு ஐஎம்​ஆர், தேசிய மருத்​து​வப் பதி​வாளர் (என்​எம்​ஆர்) ஆகியோர் வழங்​கிய அங்​கீ​காரத்தை எம்​எம்சி உடனடி​யாக ரத்து செய்து நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.இந்த மருத்​து​வர்​கள் இந்​தி​யா​வின் எந்​தப் பகு​தி​யிலும் மருத்​து​வ​ராகப் பணி​யாற்ற முடி​யாது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது. Source link