500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது 500 சதவீத வரி … Read more

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் … Read more

நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

ருத்ரபிரயாக்: க​னமழை காரண​மாக உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சோன்​பிர​யாக் அருகே நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால், கேதார்​நாத் யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது. உத்​தர​காண்ட் மாநிலத்​தில் நேற்று முன்​தினம் கனமழை பெய்​தது. இதனால் சோன்​பிர​யாக் அரு​கே​யுள்ள முங்​காட்​டியா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கேதார்​நாத் யாத்​திரையை மாவட்ட நிர்​வாகம் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ளது. கவுரி​குந்த் பகு​தியி​லிருந்து திரும்​பிய சில பக்தர்கள் நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​யில் சிக்​கினர். அவர்​களை மாநில பேரிடர் மீட்பு குழு​வினர் பாது​காப்​பாக மீட்டு சோன்​பிர​யாக் அழைத்​து வந்​தனர்​. … Read more

அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகு​தி​யில் அமர்​நாத் குகை கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்​நாத் யாத்​திரை 38 நாட்​களுக்கு மேற்​கொள்​ளப்​படு​கிறது. இந்​தாண்டு அமர்​நாத் யாத்​திரை நேற்று தொடங்​கியது. இங்கு பால்​தால் மற்​றும் நுன்​வான் முகாம்​களில் இருந்து பக்​தர்​கள் செல்​கின்​றனர். பால்​தால் வழி​யாக அமர்​நாத் செல்ல 14 கி.மீ. யாத்​திரை செல்ல வேண்​டும். நுன்​வான் முகாமிலிருந்து பஹல்​காம் வழி​யாக செல்ல வேண்​டும் என்​றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்​டும். … Read more

உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து சிவன் கோயில்​களுக்கு பாத யாத்​திரை செல்​வது வழக்​கம். அதன்​படி உ.பி.​யில் புனித யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்​லாதவர்​கள் நடத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், கடை உரிமை​யாளரின் பெயர், கைப்​பேசி எண் போன்​றவற்றை கடைக்கு முன்​னர் எழுதி வைக்க வேண்​டும், யாத்​திரை செல்​லும் பாதைகளில் இறைச்​சிக் … Read more

பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், சங்​காரெட்டி மாவட்​டத்​தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை​யில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 40 ஆக உயர்ந்​துள்​ளது. 33 பேர் காயத்​துடன் இன்​ன​மும் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பலர் காணா​மல் போயுள்​ளனர். இந்​நிலை​யில், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி இறந்​தவர்​களின் குடும்​பத்​தாரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். இந்நிலையில், இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்​கு​வ​தாக சிகாச்சி தொழிற்​சாலை செய​லா​ளர் விவேக் தெரி​வித்​துள்​ளார். … Read more

நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார். சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்​டும் நாடாளு​மன்​றத்​தில் பணி​கள் நடை​பெறாது என்று நாடாளு​மன்ற விவ​கார ​துறை அமைச்​சர் கிரிண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார். கூட்​டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி​யுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுமார் ஒரு மாதம் நடை​பெறும் இந்த நீண்ட … Read more

உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை

லக்னோ: உ.பி.​யில் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோருக்கு எதி​ராக பூஜ்ய சகிப்​புத்​தன்மை கொள்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அரசு பின்​பற்றி வரு​கிறது. வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​காக ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கையை கடந்த 2023, ஜூலை 1-ம் தொடங்​கியது. இந்த நடவடிக்கை தொடங்​கப்​பட்டு 2 ஆண்​டு​களை பூர்த்தி செய்​துள்​ளது. ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கை​யில் கடந்த 2 ஆண்​டு​களில் 97,158 கிரிமினல்​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. இதில் 68 பேருக்கு அளிக்கப்பட்ட மரண … Read more

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முன்னர் திட்டமிட்டதை விட ஒரு வாரம் அதிகமாகும். முன்னதாக, இந்தக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் … Read more

“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

மும்பை: “மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார். தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை சேர்ந்த நபர்கள், அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ … Read more