மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவு: ஜே.பி.நட்டா தகவல்

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம்!

தமிழகம், கேரளா மற்றும் நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சோதனை நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.  நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் ஒரேநாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் … Read more

ஆர்எஸ்எஸ் தலைவரை ‘தேசத் தந்தை’ என புகழ்ந்த இஸ்லாமிய அமைப்பு

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை ‘நாட்டின் தந்தை’ என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி புகழ்ந்துள்ளார். அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசியின் அழைப்பை ஏற்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், டெல்லியில் அந்த அமைப்பு இயங்கி … Read more

கீ செயின், பேப்பர் வெயிட்கள், காலண்டர்கள் ஏழுமலையானுக்கு பயன்படுத்திய மலர்களால் 850 வகையான கலை பொருட்கள் தயாரிப்பு: சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை கொண்டு கீ செயின், பேப்பர் வெயிட், காலண்டர் என 850 வகையான கலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட பூக்களை வீணாக்காமல் இவற்றை கொண்டு உலர் மலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளை உருவாக்க டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்ட பல்கலைக்கழகத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம்தேதி திருமலை திருப்பதி … Read more

இலவச மருத்துவ சிகிச்சை பெற ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்…!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். உங்களிடம் அந்தோதயா ரேஷன் அட்டை இருந்தாலே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்கிவிட்டால் போதும். ஆயுஷ்மான் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்? அந்தோதயா ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள் வாயிலாக இந்த கார்டு பெற விண்ணப்பிக்கலாம். மத்திய, … Read more

‘பி.எம். கேர்ஸ்’ நிதியத்துக்கு பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தொடக் கத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதுபெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம் (பிஎம் கேர்ஸ் பண்ட்) உருவாக்கப்பட்டது. கரோனா மற்றும் இதுபோன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் … Read more

ஹிஜாப் வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு … Read more

உத்தரகாண்டில் நிலச்சரிவு; வாகனங்கள் சேதம்

ராஞ்சி: உத்தரகாண்ட் நெடுஞ் சாலையில்  ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் சேதமானது. பலர், தங்களது வாகனங்களை திருப்பி கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், … Read more

வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாமா -அழுத சிறுமிக்கு 100ரூபாயும் சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்த அவலம்

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறு குழந்தைகள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களாலேயே பெரும்பாலான குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்றதொரு சம்பவம் அசாமில் அரங்கேறியிருக்கிறது. தனது உறவினர் சகோதரியின் 11 வயது மகளை 31 வயது ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அவர் கையில் ரூ.100 பணமும், சிப்ஸ் … Read more

சமூக நல்லிணக்க முன்னெடுப்பு: முஸ்லிம் தலைவரை மசூதிக்குச் சென்று சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர்

புதுடெல்லி: சமீபகாலமாக முஸ்லிம் தலைவர்களைத் சந்தித்து வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வியாழக்கிழமை மசூதி ஒன்றுக்கு சென்று இஸ்லாமியத் தலைவரை சந்தித்து பேசினார். அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேசிய தலைநகரில் உள்ள மசூதி … Read more