SSC CGL Exams 2022: தமிழ் எங்கே? கொந்தளித்த திமுக எம்.பி கனிமொழி!

மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு SSC எனப்படும் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்விற்கு CGL என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் பி பிரிவில் பல்வேறு துறைகளுக்கான Assistant அல்லது Executive Assistant பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30. இது Pay Level 8 … Read more

அக்.7ம் தேதி ஆஜராக டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை அக்டோபர் 7ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றியைப் பார்த்து தன்னை துன்புறுத்த ஏஜென்சிகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் டிகே சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கவிதா எங்கே? தேடிய BRS தொண்டர்கள்… முதல் நாளே கேசிஆருக்கு வந்த சோதனை!

மிஷன் 2024 தொடங்கிடுச்சு. இதுதான் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் முழக்கமாக இருந்து வருகிறது. தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய கட்சியின் பெயரை அறிவித்த உடனேயே, தெலங்கானா … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, கடந்த 30-ம் தேதியில் இருந்து கர்நாடகாவில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.  தசரா திருவிழாவுக்காக அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டு ஓய்வெடுத்தார். அவரைக் காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில … Read more

உ.பி.யில் தசரா விழாவில் பயங்கரம்: தீயிட்டு எரித்த மக்களை திருப்பி தாக்கிய ராவணன்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் ராவணனின் கொடும்பாவியை தீயிட்டு எரித்தபோது, திருப்பி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் ராமாயண காவியத்தில் வரும் 10 தலை கொண்ட இலங்கை மன்னன் ராவணனை அயோத்தி மன்னர் ராமர் கொன்றொழித்த திருநாளை விஜயதசமி என்ற பெயரில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதான் தசரா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன் கொடும்பாவியை தீயிட்டு … Read more

வேறு சாதி வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்: பெற்றோர், சகோதரர் தற்கொலை

பெங்களூரு: வேறு சாதியைச் சேர்ந்த வாலிபருடன் இளம்பெண் ஓடியதால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்டிகனாளா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமப்பா(69), விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). இவர்களது மகள் அர்ச்சனா, மகன் மனோஜ்(25). இந்த நிலையில் அர்ச்சனாவும், அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். டிரைவரான நாராயணசாமி … Read more

துர்கா சிலை கரைப்பின்போது திடீர் வெள்ளப்பெருக்கு; ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேர் சாவு; 50 பேர் மாயம்: மேற்கு வங்கத்தில் சோகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைத்து கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் … Read more

இந்த இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் உள்ள … Read more

மெல்ல மெல்ல குறையும் கொரோனா; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவுக்குள் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்துக்குள் தொற்று அடங்கியது. நேற்று இது சற்று அதிகரித்து 2,468 ஆக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்து 500-க்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் … Read more

திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால சாலை பக்தர்களுக்கு திறப்பு

* 3ம் கட்ட பணி ஜனவரியில் நிறைவடையும்* அறங்காவலர் குழு தலைவர் தகவல் திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயில்  தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகள் தீர்க்க கட்டப்படும் ஸ்ரீனிவாச சேதுவின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று அறங்காவல் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி லீலா மஹால் அருகில்  இருந்து ஸ்ரீவாரி சன்னிதி வரை கட்டப்பட்ட சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால … Read more