சிறுபான்மையினர் எந்த அபாயத்திலும் இல்லை அனைவருக்கும் சமமான மக்கள் தொகை கொள்கை: மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: அனைத்து சமுதாயத்தினருக்குமான ஒருங்கிணைந்த மக்கள் தொகைக் கொள்கை அவசியம் தேவை. சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை  என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகதவ் கூறினார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் தசரா பேரணி நடந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: சிலர், நம்மால் சிறுபான்மையினருக்கு அபாயம், அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது போன்று சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை. இதற்கு முன்பும் இதுபோல் நிகழ்ந்ததில்லை. எதிர்காலத்திலும் அச்சுறுத்தல் இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு … Read more

முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

லக்னோ:  உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஞாயிறன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். … Read more

காஷ்மீரில் டிஜிபி படுகொலை வீட்டு வேலைக்காரர் கைது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோகியா (57). சிறைத்துறை டிஜிபி.இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு  லோகியா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், டிஜிபி கொலை தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த யாசிர் லோகர்(23) என்பவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இது குறித்து கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘இந்த கொலையில் யாசிர் லோகர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். அவரிடம் … Read more

மலையேற்றம் சென்றபோது விபத்து இமயமலையில் பனிச்சரிவு 14 மலையேற்ற வீரர் மீட்பு: 4 சடலங்கள் கண்டெடுப்பு

டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட பனிச்சரில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் 28 பேர் உட்பட மொத்தம் 41 பேர், இமயமலையின் திரவுபதி கா தண்டா சிகரத்தில் இருந்து பயிற்சி முடித்து நேற்று முன்தினம் முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, 17 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அவர்கள் சிக்கினர். … Read more

இமாச்சலில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மோடி திறந்து வைத்தார்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1470 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 2017ம் ஆண்டு அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து … Read more

கட்சியை வழிநடத்த சொன்னார் நிதிஷ்: பிரசாந்த் கிஷோர் தகவல்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2018 ம் ஆண்டு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். இதன் பின்னர் கட்சியில்  இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது பீகாரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நிதிஷ்க்கு நான் உதவி செய்தேன். இன்று எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி இருக்கிறது. நாடு … Read more

கர்நாடக ஐகோர்ட் உத்தரவு புகையிலை பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி விதிக்கலாம்

பெங்களூரு: ‘புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த தயாரிப்பு பொருட்கள் மீது ஒன்றிய சுங்கவரி சட்டத்தின் படி வரி விதிக்கப்படுகிறது. அதே போல் தேசிய பேரிடர் குழு வரி மற்றும் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது’ என்று பெலகாவி புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள், தார்வார் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை நீதிபதி அருண் விசாரித்த அளித்த தீர்ப்பில், ‘இயற்கை பேரிடர் குழு வரி என்பது ஒன்றிய சுங்க வரி சட்டம் 1944ன் படி துணை வரியாக உள்ளது. … Read more

உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சு அமைதி பேச்சு நடத்த இந்தியா உதவ தயார்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய 4 பகுதிகளை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் போனில் பேசினார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போரின் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. தூதரகங்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். … Read more

தேர்தல் இலவச வாக்குறுதி கட்சிகளிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: இலவச வாக்குறுதிகள் தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தலின் போது கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பது சர்ச்சையாகி, விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கை, 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. … Read more

கற்பழிப்பு வழக்கில் கோர்ட் அளித்த வித்தியாசமான தீர்ப்பு!

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவுர், முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் தன் விருப்பத்துக்கு மாறாக தன்னை அவர் பின்தொடர்வதாகவும், கொலை மிரட்டல் விடு்ப்பதாகவும் தமது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.இந்தபுகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தம் மீதான வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த … Read more