நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும்; தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

மும்பை: நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி துப்பு கொடுத்தால் … Read more

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் : என்னென்ன சிறப்பம்சங்கள் ?

’ஐஎன்எஸ் விக்ராந்த் ‘ என்பது 1961-ம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தப் போர்க்கப்பல் பெரும் பங்கு வகித்தது. 1997-ம் ஆண்டு இந்தக் கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில், அக்கப்பலின் நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 2-வது விமானந்தாங்கி  போர்க்கப்பல் ஆகும். ஏற்கனவே … Read more

டீசல் , விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான மூலதன ஆதாய வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.!

Windfall Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை மத்திய அரசு இன்று முதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான சந்தை ஆதாய வரி ஒரு லிட்டருக்கு  7 ரூபாயில் இருந்து 13 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சந்தை ஆதாய வரி இரண்டு ரூபாயில் இருந்து 9 ரூபாயும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியை டன்னுக்கு 13 ஆயிரம் ரூபாயில் … Read more

இன்று மாலை கொச்சி வருகை பிரதமர் மோடி 2 நாள் கேரளாவில் சுற்றுப்பயணம்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து கொச்சி வருகிறார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தின் அருகிலுள்ள  அரங்கத்தில் நடைபெறும் பாஜவின் பொது மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இதன்பின் மாலை 6 மணியளவில் கொச்சி விமான நிலைய அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கம் … Read more

மருத்துவமனையின் அலட்சியப்போக்கு – தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

மருத்துவமனையின் அலட்சியத்தால் தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உடல்நலம் குன்றிய தங்களுடைய 5 வயது மகன் ரிஷியை சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் ஜபால்பூரிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்கள்கூட சிறுவனுக்கு என்ன பிரச்னை என்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே பெற்றோர்கள் கண்முன் தாயின் மார்பில் சாய்ந்தபடி உயிரிழந்தார் சிறுவன் ரிஷி. … Read more

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா: கேரளாவில் நிறைவேற்றம்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுமுடிவெடுக்காமல் வழக்கம் போல் அவர் தாமதித்து வருகிறார். துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதமும் எழுதியுள்ளார். இந்த மசோதா மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை … Read more

62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் ஆதரவு; டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் கலந்து கொண்டு கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் … Read more

பிள்ளையாருக்கு ஆதார் கார்டு: அட்ரெஸ் என்ன தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக … Read more

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல்; 19% அதிகரிப்பு.! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் … Read more

கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார் – 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கர்நாடகா: மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை … Read more