வேட்டையில் சூரப்புலி மோடிக்கு பாதுகாப்பு தரும் கர்நாடகா நாய்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவை சேர்ந்த 2 முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், திம்மாபுராவில் நாய்கள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 மருத்துவர்கள், வீரர்கள் இந்த மையத்துக்கு சமீபத்தில் வந்து பார்வையிட்டனர். பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி இங்கிருந்து 2 முதோல் இன நாய்க்குட்டிகளை எடுத்து சென்றனர். மோடியின் பாதுகாப்பு … Read more

கடனை திருப்பி கேட்ட பள்ளி ஆசிரியை தீ வைத்து எரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராய்சார் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (32). இவர் அதே ஊரை சேர்ந்த நபருக்கு ரூ.2.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதை திரும்ப கேட்டதாக தெரிகின்றது. இது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி தனது 6 வயது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அனிதாவை அந்த கும்பல் வழிமறித்துள்ளது. அச்சமடைந்த அனிதா அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்று, போலீசுக்கு  அவசர எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், … Read more

கட்சியில் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடியாது.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக பதில்..!

கட்சியில் ஒவ்வொருவருக்கும், எப்போதும் அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பார்தி, தனக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்ததுடன், அமைச்சர் பதவியில் இருந்து லேசி சிங்கை நீக்காவிட்டால் தாம் கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதிஷ்குமார், பிமா பார்தி இவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று … Read more

ஜம்மு காஷ்மீரில் டிரோனில் வந்த வெடிபொருட்கள்; தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: பாகிஸ்தானில்  இருந்து தீவிரவாதிகள் டிரோன் மூலம் அனுப்பிய வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறுகையில்,‘‘ஜம்முவின் ஆர்னியா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி டிரோன் மூலம் வெடிபொருட்கள் போடப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஒரு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையின் போது, ஒரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி  முகமது அலி உசைன் என்ற காசிமுக்கு … Read more

தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு, காஷ்மீரில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் வாக்குரிமை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருப்பவர்களும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தொகுதி எல்லை வரையறை முடிந்ததை தொடர்ந்து, அங்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை சந்திப்பதற்கு … Read more

கொரோனா பலிகளை மறைத்த குஜராத் அரசு; அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஸ்டேன்போர்டு மருத்துவ பல்கலைக் கழகம், பெர்க்கிலி பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த தேசிய அறக்கட்டளை ஆகியவற்றை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை  குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கொரோனா பலிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 162 நகராட்சிகளில் 90 நகராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள்,‘பிளோஸ் குளோபல்’என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், … Read more

வங்கியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.11 கோடி சில்லறை மாயம்; 25 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: ராஜஸ்தானில் எஸ்பிஐ கிளையில் இருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடு போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 25 இடங்களில் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், கரோலியில் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இந்த வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து கடந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் பல குளறுபடிகள்  நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் கையிருப்பு பணம் எண்ணப்பட்டது. அதில், ரூ.2 கோடி மதிப்புள்ள நாணயங்கள் … Read more

முல்லைப் பெரியாறு பேபி அணையில் 15 மரங்களை வெட்ட உடனடி நடவடிக்கை; கேரள வனத்துறைக்கு உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு கூட்டம், அக்குழுவின் 16வது தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மேற்பார்வை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்,‘முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிப்பதற்கு ஏதுவாக பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அணை பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்வதற்கு 5 கிமீ … Read more

ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி சேவை, விரைவில் தொடங்கப்பட உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடந்தது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்தன. இதில், ஏர்டெல் நிறுவனம் இந்த மாதமே 5ஜி சேவையை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. முதலில் ஒரு … Read more

இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, … Read more