இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள்; அரசியல் கட்சிகள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு: வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தமா?

புதுடெல்லி: இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளித்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை எனக் கூறி வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு … Read more

தேசிய அரசியலில் களமிறங்கிய கேசிஆர்!!

தேசிய அரசியலில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் சமீப நாட்களாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் அவர், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான ஒரு … Read more

உ.பி | காசியாபாத்தில் டிவி வெடித்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்த காரணத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்துள்ளனர். டிவி வெடித்து சிதறுவதற்கான தீப்பற்றி எரியக் கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விபத்துக்கு வோல்டேஜ் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் டிவி … Read more

நாடாளுமன்ற நிலைக்குழு மாற்றியமைப்பு; காங்கிரசிடம் இருந்த 2 தலைவர் பதவி பறிபோனது: திரிணாமுலுக்கு எந்தக் குழுவின் தலைவர் பதவியும் இல்லை

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்கிரசிடம் இருந்த 2 தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் குழுவின் தலைவர் பதவியும் அளிக்கப்படவில்லை. பெரும்பாலான நிலைக்குழு தலைவர் பதவிகள் பாஜகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுக்களானது, நாடாளுமன்றத்தின் அமைப்பு, அதிகாரம், சட்டமியற்றுவதற்கான உதவி, நிதி சம்பந்தமான ஆய்வு ஆகியவற்றை ஆராய்கின்றன. ஒவ்வொரு நிலைக்குழுவிலும் மக்களவை உறுப்பினர் 30 பேர், மாநிலங்களவை உறுப்பினர் 15 பேர் என 45 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நிலைக்குழுவும் ஓராண்டு இருக்கும். பதினோரு … Read more

கடன், நிலம் திட்டத்தில் மாற்றம் என பல காரணங்கள்: மதுரை எய்ம்ஸ் தாமதம் ஏன்? – ஓர் தொகுப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் புதிதாக கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தாமதப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? ஒரு வருடத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று முழுமை பெற்றுள்ள நிலையில், இன்னொன்று கட்டுமானம் தொடங்காமல் தேங்கி கிடப்பதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டதுக்கு மத்திய அமைச்சரவை 2018ஆம் வருடம் ஜனவரி … Read more

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் … Read more

Nobel Peace Prize: இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்?

உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் அழிந்து … Read more

'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்… ஆனால்' – நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன்

முன்னாள் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தது, சட்ட விரோதமாக பின்தொடர்ந்தது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்ளுக்காக டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜஸ்மீட் சிங் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், அந்த குற்றஞ்சாட்டப்பட்டவரும், வழக்கு தொடர்ந்து பெண்ணும், கணவன்-மனைவி என்றும் பின்னர்,  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்தார். மேலும், இந்த … Read more

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

பாரமுல்லா: இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று  தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று ஆற்றிய உரையில்; 1947-ல் இருந்து ஜம்மு காஷ்மீரை பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முஃப்தி குடும்பம், காந்தி – நேரு குடும்பம் எனும் 3 குடும்பங்கள்தான். ஜம்மு காஷ்மீர் … Read more

பரபரப்பு! அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!!

ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சுமார் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மர்ம நபர் … Read more