'சிவசேனா கூட்டணி நிரந்தரமல்ல!' – காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!

சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணி அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். இதன் பிறகு, சிவசேனா … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.139.33 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.139.33 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதத்தில் 23.40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.139.33 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 10.97 லட்சம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்தினர்.மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் … Read more

கருணைக் கொலைக்காக ஸ்விஸ் புறப்பட்ட டெல்லி நோயாளியைத் தடுக்க நீதிமன்றத்தை நாடிய தோழி

புதுடெல்லி: தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரது தோழி. டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் பிடிவாதமும், அவரது தோழியின் போராட்டமும் கவனத்தைப் பெற்றுள்ளது. கருணைக் கொலையை புரிந்து கொள்வோம்: நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும், இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் … Read more

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்..! – பலி எண்ணிக்கை எவ்வளவு..?

பரபரப்புக்கு பஞ்சமில்லாத காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது. இதனால் அந்து பதற்ற சூழல் உருவாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பீகாரை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் உள்ள பந்திப்போரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென அந்த பகுதியில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால்சுடத் தொடங்கினர் . இந்த தாக்குதலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானார் . தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படை … Read more

காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூருக்கு செவாலியர் விருது

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூருக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் கடந்தாண்டு ஏற்பாடு  செய்திருந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம்  எம்பியுமான சசி தரூர் பிரெஞ்சு மொழியில் பேசினார். இவரது புலமையால் அவர்  கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனின், சசி தரூருக்கு வழங்கப்படும் விருது குறித்த அறிவிப்பை … Read more

151 பேருக்கு சிறப்பு புலனாய்விற்கான மத்திய அரசின் விருது: தமிழகத்தின் 4 பெண் அதிகாரிகள் உட்பட ஐவர் தேர்வு

புதுடெல்லி: சிறப்பு புலனாய்விற்கான ’மத்திய உள்துறை அமைச்சக விருது 2022’ சற்றுமுன் 151 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழகக் காவல் துறையில் இடம்பெற்ற நான்கு பெண் அதிகாரிகள் உட்பட ஐவர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2018 முதல் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு புலனாய்வு வழக்குகளுக்கான விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டான 2022-க்கான விருதுகள் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதிலும் உள்ள காவல் துறைகள், சிபிஐ, என்ஐஏ மற்றும் என்சிபி ஆகிய பிரிவுகளின் … Read more

'வாயை திறந்தாலே பொய்..!' – அரவிந்த் கெஜ்ரிவாலை சீண்டிய மத்திய அமைச்சர்!

“டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர்,” என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார். இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக” விமர்சித்திருந்தார். இதனை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் … Read more

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் கட்சிரோலி, புனே, சதாரா, சோலப்பூர், நாசிக், ஜல்ஹான், போந்த்யா போன்ற 28 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளம் இன்னும் வடியாததுடன் ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை … Read more

10 நாட்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்த 2.5 கோடி பேர் – தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 நாட்களில் 2.5 கோடி பேர் தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை தடுக்கவும் போலி வாக்காளர்களை களையெடுக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி அறிவித்தது. இதற்காக படிவம்-பி-யை இணையவழியில் (ஆன்லைனில்) … Read more

நாள் முழுவதும் இலவசமா பயணிக்கலாம்… 75வது சுதந்திர தின பெங்களூரு ஸ்பெஷல்!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம். நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியை மகத்தான நாளாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்ற முன்வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி தேசியக் கொடி விற்பனை களைகட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு எதிர்பார்க்காத சலுகை அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக … Read more