மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் கட்சிரோலி, புனே, சதாரா, சோலப்பூர், நாசிக், ஜல்ஹான், போந்த்யா போன்ற 28 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளம் இன்னும் வடியாததுடன் ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை … Read more

10 நாட்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்த 2.5 கோடி பேர் – தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 நாட்களில் 2.5 கோடி பேர் தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை தடுக்கவும் போலி வாக்காளர்களை களையெடுக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி அறிவித்தது. இதற்காக படிவம்-பி-யை இணையவழியில் (ஆன்லைனில்) … Read more

நாள் முழுவதும் இலவசமா பயணிக்கலாம்… 75வது சுதந்திர தின பெங்களூரு ஸ்பெஷல்!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம். நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியை மகத்தான நாளாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்ற முன்வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி தேசியக் கொடி விற்பனை களைகட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு எதிர்பார்க்காத சலுகை அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக … Read more

குஜராத்தில் பிரபல தங்கும் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பல்.. 27 பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரபல தங்கும் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அலெண்டோ என்ற இந்த 4 தளங்களை கொண்ட ஓட்டல், அரபி கடல்  ஓரம் பெரிய பெரிய தொழிட்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு இந்த ஓட்டலின் கீழ் தளத்தில் தீ பிடித்தது. மிகவும் வேகமாக பரவிய தீ சில நிமிடங்களில் மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் அந்த ஓட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் … Read more

கர்நாடகா ஊழல் தடுப்பு பிரிவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி, அதனை கலைக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன்கீழ் ஊழல் தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக வழக்கறிஞர் சங்கம், சமூக மாற்றத்துக்கான அமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர் சித்தானந்த அர்ஸ் உள்ளிட்டோர் கர்நாடக உயர் … Read more

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர்? – முதல்வர் நிதிஷ் குமார் பதில்!

“2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் எண்ணம் இல்லை,” என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார். பீகார் மாநிலத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து, பீகார் … Read more

அருந்ததீ அனுஷ்கா நெனப்பில் உடலில் தீவைத்த இளைஞர்..! முக்தி கேட்டு உயிரை விட்ட சோகம்

அருந்ததீ படத்தை பார்த்து  நடிகை அனுஷ்காவின் அடிமையான மாணவர் ஒருவர் மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்காவின் நடிப்பில் 2009 ல் வெளியான அருந்ததி படத்தை தொடர்ச்சியாக பார்த்து அனுஷ்கா போல மறுபிறவி எடுக்கலாம் என்று நினைத்து தீக்குளித்து உயிரை விட்ட மாணவர் ரேணுகா பிரசாத் இவர் தான்.! கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்த ரேணுகா பிரசாத். பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து … Read more

ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை வருகிறது..!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார்.

தபால் நிலையங்களில் 10 நாட்களில் ஒரு கோடிக்கும் மேல் தேசிய கொடிகள் விற்பனை!

கடந்த 10 நாட்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். அதன் அடிப்படையில், நாடு முழுதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என … Read more

“மோடி பிரதமராகும் போது, நிதிஷ் ஏன் பிரதமராக கூடாது?” – தேஜஸ்வி யாதவ் ஆதரவு

பாட்னா: பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவே நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பாஜக விமர்சித்தது. இதனை நிதிஷ் குமார் மறுத்தார். தனக்கு அத்தகைய விருப்பம் … Read more