அருந்ததீ அனுஷ்கா நெனப்பில் உடலில் தீவைத்த இளைஞர்..! முக்தி கேட்டு உயிரை விட்ட சோகம்

அருந்ததீ படத்தை பார்த்து  நடிகை அனுஷ்காவின் அடிமையான மாணவர் ஒருவர் மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்காவின் நடிப்பில் 2009 ல் வெளியான அருந்ததி படத்தை தொடர்ச்சியாக பார்த்து அனுஷ்கா போல மறுபிறவி எடுக்கலாம் என்று நினைத்து தீக்குளித்து உயிரை விட்ட மாணவர் ரேணுகா பிரசாத் இவர் தான்.! கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்த ரேணுகா பிரசாத். பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து … Read more

ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை வருகிறது..!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார்.

தபால் நிலையங்களில் 10 நாட்களில் ஒரு கோடிக்கும் மேல் தேசிய கொடிகள் விற்பனை!

கடந்த 10 நாட்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். அதன் அடிப்படையில், நாடு முழுதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என … Read more

“மோடி பிரதமராகும் போது, நிதிஷ் ஏன் பிரதமராக கூடாது?” – தேஜஸ்வி யாதவ் ஆதரவு

பாட்னா: பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவே நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பாஜக விமர்சித்தது. இதனை நிதிஷ் குமார் மறுத்தார். தனக்கு அத்தகைய விருப்பம் … Read more

‘அருந்ததி’ பட பாணியில் மறுபிறவி: 23 வயது இளைஞர் பலியானது எப்படி?

‘அருந்ததி’ படம் பார்த்து மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த 23 வயது இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 23). மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பில், கடந்த 2000 ஆம் ஆண்டு … Read more

நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்தது ஒன்றிய அரசு…

டெல்லி: நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

75-வது சுதந்திர தின விழா | பெருங்கூட்டங்களை தவிர்க்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய … Read more

பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை: பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு

பாட்னா: பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது மிக முக்கியம், அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் களம் இறங்கும் சுனில் பன்சால் – அடுத்த பேரவைத் தேர்தலில் அமித் ஷாவின் வியூகம் பலிக்குமா?

ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க பாஜக மும்முரமாக செயலாற்றி வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து அங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியே 2 முறை ஆட்சியை பிடித்து சந்திரசேகர ராவ் முதல்வரானார். இம்முறை ஆளும் கட்சிமீது உள்ள அதிருப்தி, பல திட்டங்களை அமல்படுத்தாதது, வேலை வாய்ப்பை உருவாக்கி தராதது, 2 படுக்கை அறை இலவச வீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதது போன்ற … Read more

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு…

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவித்துள்ளது. கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, ஆய்வாளர் கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டிமுத்துலட்சுமி, எஸ்.ஐ. செல்வராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.