ஜனனி சுரக்‌ஷா யோஜனா | தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதியுதவி

சென்னை: ஜனனி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனனி சுரக்‌ஷா யோஜனா மத்திய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைக்க செயல்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நகர்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 700 ரூபாயும், கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் 2019-20ம் ஆண்டில் 4,21,182 … Read more

சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் காலமானார்..! – தலைவர்கள் இரங்கல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சமூக ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார். சோனியா காந்தியின் தாயார் மறைவிற்கு பலர் தங்கள் இரனகளை தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ்குமார் – சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்

பீகார் சென்றுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும் சந்திரசேகர ராவ் வழங்கவுள்ளார். மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவரான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயற்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் … Read more

கையிருப்பில் உள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை சலுகை விலையில் வழங்க ஒப்புதல்!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை விலையில் பருப்பு வகைகளை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது. கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை காலி செய்யவும், துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 12 மாத காலத்திற்கு வழங்கப்படும் இந்த சலுகை திட்டம் … Read more

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,380.50 கோடியை ஒதுக்கியது நிதி அமைச்சகம்

டெல்லி: ஊரக உள்ளாட்சிஅமைப்புகளுக்கான நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,380.50 கோடியை நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.3,733 கோடியும், பீகாருக்கு ரூ.1,921 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் வெற்றி வெற்றி பெற பாஜக, பீகாரில் பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடு முழுவதும் “ஆபரேஷன் தாமரை” திட்டத்தின் மூலம், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது அல்லது ஆளும் அரசுடன் அங்கம் வகிப்பது என பாஜக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெற்றியடைந்தது. ஆனால் டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் “ஆபரேஷன் தாமரை” தோல்வி அடைந்துள்ளது. … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ காலமானார்..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர், பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்றும் சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் – காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில், வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைவாக வழங்கியதாகக் கூறி, ஆசிரியர்களை, மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்று உள்ளது. அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரம் … Read more

ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் : செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்தது காரணமா?

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் கோபி கந்தர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வில், 11 மாணவர்கள் “DD” க்ரேடு பெற்றுள்ளனர். இது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்ததைக் குறிப்பதாகும். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கணித ஆசிரியரையும், பள்ளி எழுத்தரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். நடைமுறைத் தேர்வில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதற்காக தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்க்கண்ட் கல்வி கவுன்சிலின் தளத்தில் மதிப்பெண்களை ஆன்லைனில்  பதிவேற்றியதற்காக … Read more

டெல்லியில் இன்று முதல் தனியார் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல்

டெல்லி: டெல்லியில் இன்று முதல் தனியார் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை முதல் டெல்லியில் சில்லறை மதுபான கடைகளை மாநில அரசே நடத்த திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி அரசு 300க்கு மேற்பட்ட  சில்லறை மதுபான கடைகளை திறக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.